பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள் தத்துவம் 177 வைப்பது விரைந்து செல்வதற்கு அதுவே சாதனம் என்பது பற்றி. சொன்ன சொல் மறுக்காமல் உடனே புறப்படத் தயாராயிருப்பதுபோல் ஆழ்வார் நாயகியின் கண்ணுக்குத் தோற்றியதால் மட என்ற அடைமொழியால் (மட-இளமை) சிறப்பித்தார். நாயகன் விடுகின்ற தூதைக் காட்டிலும் நாயகி விடுகின்ற தூதுக்கு ஏற்றமுண்டு. இராமனால் தூதுவிடப் பெற்ற சிறிய திருவடிக்குப் பல இன்னல்கள் ஏற்பட்டன. பிராட்டியின் தூதனாக அவன் இராமனிடம் மீண்டு வந்தபோது அவனுடைய திருமார்போடே அணைக்கப் பெற்றான். நாரையின் உள்ளும் புறமும் வெண்மையாய் இருப்பதுபோல ஆசாரியர்களும் தூய்மை வாய்ந்த மனம் மெய் மொழிகளையுடையவர்கள் என்பது நாரையின் உள்ளுறைப் பொருள். நாரையைத் தூது செல்லுமாறு இரந்த தலைவி, அங்குச் சென்றால் சொல்ல வேண்டிய செய்திகளைச் சில குயில்கட்குக் கூறுகின்றாள். ஒருவரை அழைத்துவிட்டு மற்றொருவருக்குச் செய்தி சொல்லுகின்ற போக்கிலிருந்து ஆழ்வார் நாயகியின் மிகுதியான கலக்கம் நன்கு புலனாகின்றது. இத்தகைய கலக்கத்தை உண்டு பண்ணியது விஷயாந்தரங்களைவிட பகவத் விஷயத்தில் உண்டான ஏற்றம். இனக் குயில்கட்கு ஆழ்வார் நாயகி கூறும் செய்தி: முன்செய்த முழுவினையால் திருவடிக்கிழ்க் குற்றேவல் முன்செய்ய முயலாதேன் அகல்வதுவோ? விதியினமே (2) என்பது, அநாதிகாலமாகத் திரட்டின பாவத்தாலே (வினை) திருவடிவாரத்திலே அந்தரங்க கைங்கரியம் பண்ணுவதற்கு ஏற்கெனவே முயலப்பெறாத நான் அகன்று போக வேண்டியதுதானே? என்று கேளுங்கள்" என்கின்றாள்.