பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவாமியின் இறையதுபவம் 81 (1) யானையை எத்தனை முறை பார்த்தாலும் பார்க்கும் போதெல்லாம் அரிய பொருளைப் பார்ப்பது போல் பரமானந்தத்தைத் தரும்; எம்பெருமானும் "அப் பொழுதைக்கப்பொழுது என் ஆராஅமுதமே" (திருவாய் 2.5:4) என்று இனிப்பான். (2) யானையின்மீது ஏறவேண்டியவன் யானையின் காலைப் பற்றியே ஏறவேண்டும்; எம்பெருமானிடம் சேர வேண்டியவர்களும் அவனது திருவடியைப் பற்றியே சேர வேண்டும். (3) யானை தன்னைக் கட்டத் தானே கயிறு கொடுக்கும்; "எட்டினோ டிரண்டெனும் கயிற்றினால்" (திருச்சந்த 83) என்றபடி எம்பெருமானைக் கட்டுப்படுத்தும் பக்தியாகின்ற கயிற்றை அவன் தானே தந்தருள்வான். "மதி நலம் அருளினவன்" (திருவாய். 1.1:1) (4) யானையை நீராட்டினாலும் அடுத்த கணத்தி லேயே அஃது அழுக்கோடு சேரும்; எம்பெருமான் சுத்த பவித்திரனாய் சுத்த சத்துவமயனாய் இருக்கச் செய்தேயும் "பொய்ந் நின்ற ஞாலமும் பொல்லா அழுக்குடம்பும்" (திருவிருத்.1) உடைய நம் போலியருடன் சேரத் திருவுள்ள மாயிருப்பன், வாத்சல்யத்தாலே. (5) யானையைப் பிடிக்க வேண்டுமானால் பெண் யானையைக்கொண்டு பிடிக்க வேண்டும்; பிராட்டியின் புருஷகாரமின்றி எம்பெருமான் வசப்படான். (6) யானை பாகனுடைய அநுமதியின்றித் தன் பக்கம் வருகின்றவர்களைத் தள்ளி விடும்; எம்பெருமானும் "வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து" (திருவாய்,4.6:8) என்றபடி பாகவதர்களை முன்னிட்டுப் புகாதாரை அங்கீகரித்தருளான்.