பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போரும் வாழ்வும்

109


எழுதிய கட்டுரையைப் படித்த பல அறிஞர்கள் அதைப் பாராட்டிக் கடிதம் எழுதினர். சென்னையில் வெளிவந்த ஒரு தினசரியில் அதுபற்றி தெளிந்த விமரிசனம் தீட்டியிருக்கக்கண்டேன். இவ்வாறு அக்காலத்திய போர் நிலையை நாம் ஆய்ந்துகொண்டிருந்த வேளையில் மேலை நாட்டில் ஜெர்மனி நாடு ஒவ்வொரு நாடாக விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண்டே இறுதியாக ஆங்கில நாட்டின் மேலும் போர்க்கொடி உயர்த்திவிட்டது.

எனவே ஆங்கிலேயர் கீழ் இருந்த நம் நாடும் நேரடியாகப் போரில் கலக்க வேண்டிய தேவை உண்டாயிற்று. அந்த நிலையில் கிழக்கே ஜப்பான் நாடும் ஜர்மனியோடு சேர்ந்து போரிட உலகப் போரே உருவாகிவிட்டது. பிறகு ரஷியாவையும் ஜர்மனி, ஜப்பான் ஆகிய இரு நாடுகளும் இருபுறமும் போருக்கு ஈர்த்தன. இந்நிலையில் நாட்டிலும் உலகிலும் போர்க் குழப்பங்கள் மிகுந்த வேளையில் எனது மனத்திலும் பல்வேறு குழப்பங்கள் புகுந்து கொண்டன.

எனது அன்னையர் இருவரும் மறைந்த பிறகு என் செலவெலாம் ஓய்ந்துவிட்டன. பள்ளிப் பணிக்கு ஓராண்டு விடுமுறை மேற்கொண்டேன். வெளியே அரசியல் கூட்டங்களுக்காயினும் சரி-சமயக் கூட்டங்களுக்காயினும் சரி-வேறு எதற்காயினும் சரி எங்கும் செல்வதில்லை. மாவட்டக்கழகக் கூட்டங்களுக்கும் சரியாக செல்வதில்லை. மூன்று கூட்டங்களுக்கு வாராவிட்டால் உறுப்பினர்ப் பதவி நீங்கப்பெறும் நிலையும் உண்டாகி, மறுபடியும் சேர்த்துக்கொள்ளப் பெற்றேன். எனது ஊரில் உள்ள நிலபுலன்களைக் கண்காணிக்க வேண்டியிருந்தது. எனது பெரிய அன்னையாரும் அவருடைய நிலபுலன்களையெல்லாம் என் பெயரிலும் என் மனைவி சந்திரமணியின் பேரிலும் எழுதிவைத்துச் சென்றனர். எனவே அவைகளையும் காண்காணிக்க வேண்டியிருந்தது. ஊரில் ஓரிரு மாதங்கள் தங்கி எல்லா நிலங்களையும் அளந்தோம். அப்போது பல உண்மைகள் வெளியாயின.