பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

காஞ்சி வாழ்க்கை


மாகரைகள் பொங்கி வழிந்து பெருக்கெடுத்து
மாகரையின் மாமரங்கள் மாள்குவித்து–ஏகாந்த

நீரின் உருவாக்கி நீசென்றால் உன்பெயர்க்கு
நீர்மை எனப் பொருள்கொள் நீர்மையோ?–சீரான

பெருவெள்ளந் தன்னிலே பெண்கள் கலந்துபெயும்
திருவின் விளக்கெல்லாம் செம்பொட்டோ–உருவனையார்

மாலை உனக்கணிவர் மட்டற்ற இன்பத்தால்
சோலை வயற்புறத்தில் சோறுண்டு–மேலாய

காதலர்க ளோடு களிப்புக் கடல்குளித்துப்
பூதலத்தில் போயிடுவர் பொற்புடனே–நீதான்

சுழிகள் கிளப்பிடுவாய் சூழலிலே யுற்றால்
விழிகள் பிதுங்கிடவே வெல்வாய்–கழிகளிலே

தங்கிப் பல உயிர்கள் தண்ணீர்த்தா கம்போக்க
இங்கிதமாய் நின்று இசைவிப்பாய்–பொங்கரிய

பாலாற்று வெள்ளமெனப் பார்மீதில் இத்தலை நாள்
மேலாற்றி வந்திடு நல் மேநீரே!–காலாற்றி

இவ்விடத்தில் நின்று எனதுஉரை கேட்டதற்பின்
எவ்விடத்தும் ஏகிடுவாய் ஏர் நீரே!–உய்வரிய

நற்றொண்டை நாட்டை நலஞ்சிறந்த நாடாக்க
உற்பத்தி யான உயர் ஆறே!–வெற்பினர்சேர்

நந்திப் பெருமலையில் நாடிடவே தோன்றியுடன்
உந்தி விளையாடி உற்றிட்டு–சொந்தமென

மைசூரில் வாழும் மகிபர் தடுத்துன்னின்
மெய்மீது வாரு மிகு நீரைக்–கைசெய்து

கட்டி வயற்கனுப்பிக் காணரிய நற்பயனை

மட்டுக் கடங்காது மல்குவித்து–விட்டுஉனைப்