பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறுபாணாணுற்றுப் படை

33

 வறுமையால் வாடிப் பரிசில் பெறக் கருதிய ஒருவனைப் பரிசில் பெற்று வந்த வேறொருவன் தனக்கு அதையளித்த வள்ளலிடம் செல்லுமாறு அவ்வள்ளலின் புகழையும் கொடை வளத்தையும் எடுத்துக் கூறி ஆற்றுப்படுத்துகிறான்.

பத்துப் பாட்டு என்ற சங்க இலக்கியத் தொகை நூல்களிலே ஐந்து ஆற்றுப்படைகள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று சிறுபாணாற்றுப்படை. இது ஒய்மானாட்டு நல்லியக்கோடனைப் புகழ்ந்து இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது. யாழ்ப்பாணர்கள் பெரும்பாணரென்றும் சிறுபாணரென்றும் இருவகைப்படுவார்கள். அவர்களில் சிறுபாணன் ஒருவனை ஆற்றுப் படுத்தியதால் இந்நூலுக்கு இப்பெயர் வந்தது போலும். ஆசிரியப் பாவால் இயற்றப்பட்டு முன்னுாற்றுக்கும் குறைந்த அடிகளை உடையதால், அடிகளின் சிறுமை பற்றி இப் பெயர் வந்ததென்றும் கூறுவர்.


வள்ளன்மை மிக்க தலைவன் ஒருவனது உயர்வு தோன்றப் பாடுவதற்கு ஆற்றுப்படை என்னும் நூல்வகை சிறந்த சாதனமாக இருக்கின்றது. இதிலே அத்தலைவனை நேர்முகமாகப் புகழாது பிறனொருவனுக்குக் கூறு முகத்தாலே புகழுவது சாலச்சுவை பொருந்தியிருக்கிறது. அவ்வாறு புகழ்ந்து பேசுவதுதான் உயர்ந்த புகழ்ச்சியாகும்.

சிறுபாணாற்றுப்படையில் விரிந்துள்ள செய்தியை இனி ஆராய்வோம். ஆற்றொனா வறுமையில் ஆழ்ந்த பாணனொருவன் ஒய்மானாட்டு நல்லியக் கோடனிடம் சென்று யானையும் தேரும் மற்றப்