பக்கம்:காதலா கடமையா.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் - 1


(“ஐந்துநாட் பின்னைநாம் அங்குவருவோம் வந்து விடுதலை வழங்குவோம் நன்றே”)

இடம்  உறுப்பினர்
கொன்றை நாட்டின்  கிள்ளை, மகிணன்
ஒருபுறத்து வெளி  முதலியவர்

நாட்டினை முன்னின்று நடத்தும் மறவர்,
கூட்டம் கூடினர்;
“அன்று நாட்டுக் காவன என்ன”
என்று தம்மில் எண்ணி இருந்தனர்.

அப்போது,
“மாழை நாட்டின் மாப்பே ரரசன்
தந்த திருமுகம் இந்தா” என்று
தந்தான் வந்தொரு தலைப்பாகைக் காரன்.
தலைவனின் இருகை தாங்கின அதனை.

படித்தான்:
"கொன்றை நாட்டின் தலைவர்க்கு
மாழை நாட்டின் மாப்பே ரரசன்

16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/17&oldid=1484375" இலிருந்து மீள்விக்கப்பட்டது