இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இயல் - 2
(“பொதுத்திரு மன்று போந்திடு கின்றான் புதுக்குக நகரைப் பொன்புதுக்கு தல்போல்”)
இடம் கொன்றை நாட்டின் தெருக்கள். |
உறுப்பினர் முரசறைவோன் பொதுமக்கள். |
வானேற்றும் மீசை வள்ளுவன், யானைமேல்
தானே றிக்குறுந் தடியால் இடியென
முழக்கிய பெரியதோர் முரசொலி, மக்களை
அழைத்தது; செவியில் ஆவல் வார்த்தது.
வள்ளுவன் சொன்னான்:
“தெள்ளுதமிழ்க் கொன்றைத் திருநா டுள்ளீர்,
மாழை நாட்டின் மன்னர் மன்னன்
வாழநாம், விடுதலை வழங்கும் நோக்கோடு
பொதுத்திரு மன்று போந்திடு கின்றான்
புதுக்குக நகரைப் பொன்புதுக் குதல்போல்.
தோளை இப் பணியில் தோய்ப்பீர் நன்றே
நாளை விடியலில் நடக்கும் இச்சிறப்பே”
19