இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இயல் - 3
(“புல்லெனப் போர்த்தஎன் புறவுடல் காண்பவர் அல்லலிற் புறைந்தஎன் அகத்தை அறியார்”)
இடம் கொன்றை நாட்டின் முன்னாள் அரண்மனை. |
உறுப்பினர் கிள்ளை, தோழி. |
கொதிக்கும் நெஞ்சையும் குளிர்விக்கும் மாலை
மறைந்தது! வந்தது மாய்க்கும் இரவு.
புல்லெனப் போர்த்தஎன் புறவுடல் காண்பவர்
அல்லலிற் புதைந்தஎன் அகத்தை அறிவரோ!”
கிள்ளைஇவ் வாறு கிளத்தினாள்.
தோழி நடுங்கிச் சொன்னாள்:
“என்கடன் யாதோ? என்கடன் யாதோ?
பொன்கடைந் தெடுத்த புத்தொளிப் பாவையே,
உன்நெஞ்சும், இளைத்த உடற்கு மருந்தும்,
பின்னாள் விரும்புமுன் பெருவாழ்வின் நோக்கமும்,
தன்னுளம் நாட்டுக்குத் தந்த தலைவன்பால்
சொல் எனில் சொல்வேன்,”
என்னலும்,
21