பக்கம்:காதல் நினைவுகள், பாரதிதாசன்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முழுவதும் இலக்கியச் சொற்பொழிவுகள் நடத்திப் பகுத்தறிவு இயக்கத்தைதக் காலூன்றச் செய்தல்.

1945 — புதுவை, 95, பெருமாள் கோயில் தெரு வீட்டை வாங்குதல், தமிழியக்கம் (ஒரே இரவில் எழுதியது), எது இசை நூல்கள் வெளியீடல்.

1946 — ‘முல்லை’ இதழ் தொடங்கம். அமைதி — ஊமை நாடகம் வெளியிடல், (29.1.46) பாவேந்தர் ’புரட்சிக் கவி’ என்று போற்றப்பட்டு ரூ.25000 கொண்ட பொற்கிழியைப் பெறுதல். நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் பொன்னாடை போர்த்தல், அறிஞர் அண்ணா நிதி திரட்டித் தருதல்.

1947 — புதுக்கோட்டையிலிருந்து ‘குயில்’ 1, 2 மாத வெளியீடு. ‘சௌமியன்‘ நாடக நூல், பாரதிதாசன் ஆத்திசூடி வெளியிடுதல். சென்னையில் ‘குயில்‘, இசையமுது வெளியிடல்; புதுவையிலிருந்து ‘குயில்‘ இதழ் ஆசிரியர் — வெளியிடுபவர். கவிஞர் பேசுகிறார் (சொற்பொழிவு நூல்.)

1948 — காதலா கடமையா? (காவியம்), முல்லைக்காடு, இந்தி எதிர்ப்புப் பாடல்கள், படித்த பெண்கள் (உரை நாடகம்), கடற்மேற்குமிழிகள் (காவியம்), குடும்ப விளக்கு III, திராவிடர் திருப்பாடல், அகத்தியன் விட்ட புதுக்கரடி நூல் வெளியிடல்.

1949 — பாரதிதாசன் கவிதைகள் 2 ஆம் தொகுதி, சேரதாண்டவம், தமிழச்சியின் கத்தி (குறுங்காவியம்), ஏற்றப்பாட்டு வெளியிடல்.

1950 — குடும்ப விளக்கு IV, குடும்ப விளக்கு V வெளியிடல்.

1951 — அமிழ்து எது? — கழைக்கூத்தியின் காதல் வெளியிடல்.

1954 — பொங்கல் வாழ்த்துக் குவியல் வெளிவரல், குளித்தலையில் ஆட்சிமொழிக் குழுவிற்குத் தலைமை ஏற்றல்.

1955 — புதுவைச் சட்டமன்றத் தேர்தல் வெற்றியுற்று அவைத் தலைமை ஏற்றல். பாரதிதாசன் கவிதைகள் — மூன்றாம் தொகுதி வெளியிடல்.

1955 — தேனருவி இசைப்பாடல்கள் வெளியீடல்.

1950 — தாயின் மேல் ஆணை: இளைஞர் இலக்கியம் வெளியிடல். தமிழகப் புலவர் குழுவின் சிறப்புறுப்பினராதல். ‘குயில்‘ கிழமை ஏடாக வெளிவருதல்.