பக்கம்:காதல் நினைவுகள், பாரதிதாசன்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1918 — நவம்பர் 3, கோபதி மன்னர் மன்னன்) பிறப்பு.

1929 — ‘குடியரசு’, ’பகுத்தறிவு’ ஏடுகளில், பாடல், கட்டுரை, கதை எழுதுதல், குடும்பக் கட்டுப்பாடு பற்றி இந்தியாவிலேயே பாட்டெழுதிய முதல் பாவர்.

1930 — பாரதி, புதுவை வருகைக்கு முன்னும் பின்னும், பாடிய சிறுவர் சிறுமியர் தேசிய கீதம், தொண்டர் நடைப்பாட்டு, கதர் இராட்டினப் பாட்டு ஆகியவற்றை நூல் வடிவில் வெளியிடல். சஞ்சீவி பர்வதத்தின் சாரல், தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு நூல்களை வெளியிடல். டிசம்பர் 10இல் ‘புதுவை முரசு‘ கிழமை ஏட்டின் ஆசிரியர் பொறுப்பேற்றல்.

1933 — மா. சிங்காரவேலர் தலைமையில் சென்னையில் நடந்த நாத்திகர் மாநாட்டின் பதிவேட்டில் ‘நான் ஒரு நிரந்தரமான நாத்திகன்‘ என்று எழுத்திக் கையெழுத்திடல்.

1934 — முழுநிலா இரவில் தோழர் ப. ஜீவானந்தம், குத்தூசி குருசாமி, குஞ்சிதிம், மயிலை சீனிவேங்கட சாமி, மாயூரம் நடராசடன், சாமி சிதம்பரனார், நாரண துரைக்கண்ணனுடன் படகில் மாமல்லபுரம் செல்லை. ‘மாவலிபுரச் செலவு‘ பாடல் பிறந்தது.

1935 — இந்தியாவில் முதல் பாட்டேடான — ‘ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்‘ தொடக்கம். இதற்கு உறுதுணையாக இருந்தவர் எஸ். ஆர். சுப்பிரமணியம்.

1937 — புரட்சிக்கவி — குறுங்காவியம் வெளியிடல்.

1938 — பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதியைக் கடலூர் குத்தூசி குருசாமி, குஞ்சிதம் குருசாமி, நாராயணசாமி நாயுடு ஆகியோர் பொருள் உதவியால் வெளியிடுதல். பெரியார் ‘தன்மான இயக்கத்தின் சிறந்த பாவலர்‘ சான்று பாராட்டுதல்.

1941 — எதிர்பாராத முத்தம் (குறுங்காவியம்)

1942 — குடும்ப விளக்கு I வெளியிடுதல்.

1943 — பாண்டியன் பரிசு (காவியம்) வெளியிடல்.

1944 — இருண்ட வீடு, காதல் நினைவுகள், நல்ல தீர்ப்பு நாடகம்), அழகின் சிரிப்பு ஆகிய நூல்களை ஒன்றன் பின் ஒன்றாய் வெளியிடல் குடும்ப விளக்கு II வெளியிடல். செட்டிநாடு