பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

தாப்பரியமாக உந்தன் சமுகத்தில் வாய்ப்புதைத்து சேப்பிளையான் சொல்ல செவிகொடுத்து நீர்கேளும்.

மாற்றலரை வென்ற மகராசன் ராசேந்திரா கீாந்திப் பிரதாபமுள்ள கிருபா சமுத்திரரே

தங்கமகா மேருவே, சகல சாம்ராச்சிய யோகமுள்ள சிங்காதனக் கொலுவில் நீர் தேவேந்திரனுக் கினையாய் வேதப் பிரதாபம் மிகு மறைநூல் வல்லவர்க்கு

يع

நீதிப் பிரதாபமுடன் நீயே கொடைக்கர்ணன்.

சங்கரனு மாமுதலா சதுர்முக பிர்மா அடியார் தாங்கள் களிக்க அளித்திடும் வாரிதியே. கல்விக் கரசே கருணைப் பிரதாபமுள்ள செல்வத்துரையே உலகம் செழிக்கவந்த சீமானே. கரருச மார்த்தாண்ட கண்டப் பிரசண்டனல்ல பரருசர் கொண்டாடும் பாக்கிய மகருசேந்திரா.

அடியார்களுக் கென்று அதிககலி தானுேட மிடிதீர்க்க வந்த முகிலையொத்த கையோனே. பொய்யாத வாசகனே! புண்ணிய சிரோண்மணியே! மெய்யாக தேசம் விளங்கவந்த சீமானே! வாருமையா ராசாவே ஒருவசனம் உரைக்கின்றேன். பாருமையா யானடியேன் பணிந்து உரைக்கின்றேன் மாத்தாம லெப்போதும் மானம் அபிமானம் வைத்து பாத்தோர்கள் மெச்சிடவே பாதி காவலுங் கொடுத்தீர் அருமையுடன் எங்களுக்கு அரசுகாவல் கொடுத்தீர். பெருமையுடன் எங்களுக்குப் பேரரசுங் கொடுத்தீர் கொப்புடனே எங்கள்குடி குலமெல்லாம் தழைக்கவே சேப்பிளையான் காவலென் ருல் சீமையெல்லாம்

கொண்டாட பேரும் கொடுத்தீர் பெரியதனமும் தான்கொடுத்தீர். ஆரும் மதித்திடவே ஆண்மைகள் உண்டாக்கிவைத்தீர். சாதரிப் பாகுடனே சால்வையுமே கொடுத்தீர். மாதரி பாகுடனே வல்லவாட்டுமே கொடுத்தீர். காதுக் கிசைந்த கடுக்கண் அரணுவுடனே தாதும் புனல்மார்பா சரப்பளியுமே கொடுத்தீர்?