பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னன் சொல் விருத்தம்

'வடகரை நாடு காவல்

வல்லசேப் பிளையான் கேளாய்! துடியிடை மாது புத்துார்

சோமாசி பட்டர் பெற்ற மடமயில் மாது தன்னை புன்

மகன்சிறை யெடுத்தொளித்ததாக வடமொழி மறையோ ரெல்லாம்

வகையெனக் குரை செய் தாரே”

வசனம் : ஆகோ கேளும் அரசுகாவல் சேப்பிளையானே, குணசீல மங்கலம் புத்துரர் சோமாசி பட்டர் மகளாகிய ஆரிய மாலையை உன்மகன் காத்தவராயனுனவன் சிறையெடுத்துப் போன தாக வடகரை பிருமணுள் ஆதியந்தமும் நம்மிடம் முறை யிட்டார்கள். அப்படி நம் காலத்தில் செய்யலாமோ? சேப்பிளே யான் !

சேப்பிளேயான் சொல்விருத்தம் அருமறை புகழ வாழும்

ஆரியப் பேந்திர மன்ன! மருமலர்ப் புத்துரர் தன் னில்

மாலை யை எனது மைந்தன் சிறையெடுத் தொளித்த தாகத்

தேவரீர் சொல்லக் கேட்டேன் கருவுடன் எங்கும் தேடிக்

கட்டியே தருகு வேனே’’

வசனம்: ஆகோ கேளுங்கள் அய்யா சாமி ஆரிய மாலையை என்மகன் சிறையெடுத்து ஒளித்ததை யானறியேன். அப்படி உண்டானல் சமூகத்தில் கட்டித் தருகுவேன் அய்யா சாமி.

سسهٔ ز؟ நாட்டுப்பாடல்

சேப்பிளையான் கூற்று

ஆரியப்பூ ராசவே ஆண்டவனே கும்பிடுறேன்! காரியமாய் கேட்டருளும் என் கர்த்தாவே சொல்லு

கிறேன்

என்னுடைய காவலென்ருல் எமனும் வந்தண்டானே உன்னுடைய தேசமதில் உத்தமனே ஆரியப்பா.