பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

கூடியே கொள்ளடத்துப் படுகைதனை

மேற்குமுகங் கொண்டெல் லோரும்

நாடியே காத்தவனே தேடுதற்கு

என்னு ன் நடந்து வாரீர்

வசனம்: சேவகர்களே இனி நாம் கொள் ள ட த் த ப் படுகையை மேற்கு முகமாகச் சென்று காத்தவனைத் தேடுவோம் சேவகர்களே.

கொள்ளடத்துப் படுகைகளைக் கூடியே யெல்லோரும் தேடியும் காத்தவனேக் கன்னிலே காளுேமென்று

மெள்ள நடந்தார்கள் மேற்கு முகமாக படுகை முதலாகப் பார்த்துமிக நடந்து திடுதிடெனச் சேனதளம் சேர்ந்து மிகத்தேடி மருச்சலங் காத்தான் வாழ்முதலைப் பரோரம் குறித்து மிகவந்து கூட்டமாய் நின்ருர்கள் குத்துநாணல் பாரோரம் கோமுதலைப் பரோரம் சுத்தி நிறைந்ததொரு சூழ விருட்சமதில்

குயில்கள்து கூவ கொஞ்சுகிளி பாடிநிற்க

மல்லிகையும் செண்பகமும் மலரெல்லாம் பூத்துதிற்க அல்லி கமலம் அலர்ந்த செந்தாமரையும்

காயா மரங்களெலாம் காய்த்து நிறைந்திருக்க பூவா மரங்களெலாம் பூத்துச் சொரியுதங்கே

சாம்பிராணி வாசம் சகல பரிமளம்வீசும் சம்பிரமாகக் கண்டான் அதிசயத்தை

மேகமது கூடி வெயிலே மறைக்கிறதும் அகமிக மகிழ்ந்திட அனைவோர் புகழ்ந்திட

தென்றல் அடிக்கிறதும் தெய்வ சபைபோல கண்டானே சேப்பிளையான் காத்தான் இருப்பிடத்தை'

ஏது புதுமையிது இதற்குமுன்கண்டதில்லை மாது தனையெடுத்த வர்ணபரி மளமும்