பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

தேட்டமுடன் குருதாரம் தன்னைத்தீண்டி

திறமுடைய சந்திரனும் குறைந்துபோனுன்

வாட்டமுள்ள ராவணனும் பெண்ணுலேதான் மாண்டதையும் கேட்டிடுவீர் மன்னவனே

செய்யாதேதும் செய்தேனுே சேரைத் திறந்தேனே வையகத்தில் இல்லாத வன்கொடுமை செய்ததுண்டோ

சட்டமுடன் ராசாவே சபைதனிலே இப்போது கட்டை அவிழ்த்துவிடும் நடந்ததைச் சொல்லு கிறேன் பூட்டை முறித்தேனே புதுக்களவு செய்தேனே எட்டரைக் குள்ளே எதமாயிருந்த பெண்ணே

பத்தரைக் குள்ளிருந்து பதுசைக் குறைத்தேனே

தவித்துவரும் மானிடர்க்கு எந்நாளும்

நிதிகொடுத்துத் தயவு வைத்து

விபத்துத்தனை யகற்றி வைக்கும்

வீரமுடி காத்தவனை வியந்துராசன்

அவிழ்த்துவிட உத்தரவு கேட்டு

மிகசேப்பிளையான் அஸ்தம் தொட்டு

கயிற்றினால் கட்டியிருந்த கட்டை

அவிழ்த்துவிட்டான் கனிவுள் ளோனே.

கட்டை அவிழ்த்திடவே காத்த பரிமளமும்

ாசாவைத் தான்பூண்டு கைதொழுது

வாருமையா ராசாவே ஒருவசனம் உரைக்கின்றேன்

காருமென்று காவல்தனை கட்டளையும் இட்டீர்காண்

பார்தனிலே நான்காவல் பார்த்து வருகையிலே ஊர்தனிலே ந்ான்காவல் உலாவி வருகையிலே

கன்னியர்கள் தன்னை நான் கடைக்கண்ணுல்

பார்ப்பதில்லை

பெண்களையும் நான்கண்ணுல் பிரியமுடன் பார்ப்ப்தில்லை

அறந்தழைக்கும் சுக்ரீவன் ஆக்கினபோல் நடத்தி கறந்துவைத்த்பால்தன்னைக் காகங் குடியாமல்: