பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

முப்பத்து முக்கோடி தேவர் முதலாக நாற்பத்து எண்ணுயிரம் முனிவர்கள் தன்னுடனே அன்ன காமாகதியரை அடிவனங்கித் தெண்டனிட்டு தென்கைலை வாழும் சிவனுரைத் தெண்டனிட்டு அம்மான் திருமாலை அடிவணங்கி தெண்டனிட்டு தாக்கமுள லெகஷ்மியை தானே அடிபணிந்து தொழுது வணங்கியையன் துய்யோனும் ஏணிவழி பழுதாலே தானேறி பார்க்கக் கழுமுனையில் அன்றுதான் சேப்பிளேயான் அண்ணுந்து பார்த்துநின்று கண்டுதான் மைந்தனையும் கண்ணிர் சொரிந்தருளி

என்றுனைக் காண்பேன் என் கண்மணியே என்றழுதான்

பிள்ளையில்லாப் பாவியு நானுனே யெடுத்துப்

பிரியமாக வளர்த்தே னப்பா

கள்ளவிழி மாலையி ல்ைகழு வேறிப்

பதம்பெறவும் காண்போ ராகி

தெள்ளமிர்தமே கொடுத்தாள் அவளும் நானும்

தெரியநின்று தபங்கு கின்ருேம்

உள்ளதொரு நல்வாக்கு நீயுரைத் திடுவாய்

எந்தனுக்கு உயிருங் கொளவே.

தகப்பன் சேப்பிளையான் தாயாரும் சங்கப்பிள்ளை தேசத்துக் கதிபதியாம் தீரனவன் ஆரியப்பன் இதத்தில் வளர்த்தருளும் என் தகப்பா கேட்டருளாய் ஈஸ்பரன் கிருபையினல் எடுத்து வளர்த்தாய்நீ

சால நல்வாக்கு சாற்றுகிறேன் கேளுமினி

நீர்க்குமிழி ஏது நிலைத்த காயமேது பார்மேல் பிறந்தவர்கள் பரலோகம் சேர்வதல்லால் என்னளும் பூலோகம் இருப்பார் ஒருவரில்லை

நனருக உந்தனுக்கு நானுமிகச் சொல்லுகிறேன்

காமாக வாசலுக்கு காத்தானென்று பேரும்பெற்று காமாக வாசலுக்கு நல்பதியே உண்டுபண்ணி