பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

கலியுக தேசமதில் காத்தவ ராயனென்று நலியாமலே கழுவில் நானேறும் போதளவும் உன்கையால் கட்டுண்டு உலகத்தோர் கொண்டாட உன்கையால் கட்டிடவும் சத்தியமாய் உந்தனுக்கு ராச வரிசையாய் ராசாக்கள் மெச்சிடவே ஆசையாய் உந்தனையும் அனைவோரும் சூழ்ந்துவர மாலை கழுத்திலிட்டு வான மத்தாப்புடனே ஆலயங்கள் எல்லாம் ஆணழகன் சேப்பிளையான் காருலவும் பெருங்கடல் கடல்சூழ்ந்த வையகமும் பேருள்ள மட்டும் பெருமைகள் கொண்டாட இப்பூமி தன்னில் என்பேர் விளங்குமட்டும் செப்பமுடன் உன்பேரு செலுத்திவைப்பேன்

என்றுரைத்தார்

உலகமதில் காமாகதி சாட்சி யாக

உந்தனுக்குப் பிள்ளையென்று உலகம் சொல்ல நலம்பெறவே உன்குலத்தை வளர வைத்து

நெறியுடனே மாலையரை சிறையெடுத்து சிலையழக ளுகவுந்தான் உந்தன் கையில்

சிக்கியுமே கட்டுக்குள் அடக்க மாக தலைவனென்று இச்சமயம் உன்பேர் சொல்லி

சதிர்கட்டிக் கழுவேறித் தழைப்பே னென்ருர்,

வசனம்: ஆகோ கேளும் என்னை வளர்த்த கடமைக்காக நான் சொல்லிய வாக்கின்படியே காமாவி.கிருபையால் நடப்பது நிச்சயம் உம்முடைய வீடுபோய்ச் சேருமென்று என்னவிதமாக வாழ்த்துகிருர் பார்.

அச்சாலே தலைவர் அருள்காளிக் காதேவர்

ஆணைக்கொல்லன் ஆசாரி அடிதொழுது தூண்டிதனை நாணயமாய் என்கழுத்தில் தலமாகச் சூட்டென்றும்

மானைத் துதித்து மகாதேவர் சொற்படியே கொண்டுவக்க கட்டுமென்று கூப்பிட்டார் காத்தவனர்