100
மேசை பலகையி லிருந்து பாதர்
முனைவீரன் பிரட்டனுக் கெழுதினார் நவாபு
நவாபு பிரிட்டனுக்குக் கடிதம் எழுதுதல்
பசுமலை கானன் வாரானாம் .
பட்டாளந் துருப்போடே யெதிர்கட்டி மறைத்து
திருப்ப வேனுங் கானனைக் கிழக்கே என்று
சிங்காரப் பிரிட்டனுக் கெழுதினார் நவாபு
கானன் - பிரிட்டன் போர்
நீயும்
ஆயிரம் சனம் வரைக்குங் கூட்டி கானன்
அறுபது துருப்பு குதிரையுங் கூட்டி ஏழு நல்ல பீரங்கி யோடே கானன்.
எண்ணாமல் சாமந்தனில் வெளியி லிறங்கி ராத்திரி யெல்லாம் வழி மறித்து கண்ட
பேருக்குத் தெரியமால் ஒளிவா யிருந்தான் அப்போது துரை பெரிய பிரிட்டன் பாதர்
ஆண்பிள்ளை பல்லக்கு மேலேறிக் கொண்டு பட்டாளத்தை முன்னே நடத்தி பிரிட்டன் பசுமலைக்குப் பாளையத்தை நடத்தின வேளையிலே எதிர்காட்டி கான்சாயபு துரையும் அப்போ
எழுப்பினான் பீரங்கி சொல்ல முடியாது அதிலே பனிரெண்டு சிப்பாய்கள் தலைகள்
அதிர் வேட்டினா லறுந்த கூச்சலு முண்டாக அப்போது துரை பெரிய பிரட்டன் சனங்கள்
அலங்கோல மானதைக் கண்ணாலே கண்டு பல்லக்கு விட்டு கீழே யிறங்கி அப்போ
படை மன்னன் பஞ்ச கல்யாணியின் மேலேறி பிரம்பு தனைக் கையிலே வாங்கி - பிரிட்டன்
பின்னிட்ட சனங்களை வாங்கிட்டான் பளுத்தா முன்னேறி தீனத் னென்று சொல்லி சனங்கள்
முழித்துப் பாராமலே நடக்குதே மேற்கு ஊரோவெள்ள சோல்தார் துரைகள் அப்போ
ஒழுங்காகத் தொப்பி கழட்டி யடித்து முன்கையை கடித்தல்லோ துரைகள் அங்கே
முனைந்து பசுமலை நோக்கி நடந்து வந்திறங்கி நவாபு சமுகத்தை நோக்கி அந்த
நாழிகையில் பல்லக்கு விட்டுக் கீழே யிறங்கி தொப்பி கழட்டி சலாம் வாங்கிக் கொண்டார் அப்போ
துடியான நவாபு சாய்பேது சொல்ல லுற்றார்