பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101

வாங்கலையோ திசைமதுரைக் கோட்டை என்று

மம்முதலி வெகு கோபமாகவே சொல்ல

நவாபு - பிரிட்டன் சந்திப்பு

ஆண்டவனே மம்முதலி துரையே பிரிட்டன்

அன்பாக ஒருசேதி சொல்லுகிறேன் கேளும் ஆட்டுக் கிடாதனிலே சாய்பு எனக்கு

ஐந்தாறு கிடாயாவது கொடுக்க வேணும் எண்ணைக் கிடாவிலே சாய்பு எனக்கு

எழுபது கிடாக்கறியு மிப்போது கொடுத்து ஏழு வண்டி சாராயங் கொடுத்தால் மதுரையை

எட்டு நாளைக்குள்ளே பிடிக்கிறேன் சிங்கம் என்று சொல்லி பொல்லாத பிரிட்டன் அப்போ

எல்லோரையுங் கூட்டியே மதுரை வந்து சேர்ந்து

மதுரைக் கோட்டை முற்றுகை

மூலைக்கரை கொத்தளத்து மேலே அப்போ

மோர்சாவை யப்போ சீக்கிரம் வளர்த்தி

ஏழுநல்ல மோர்சா வளர்த்தி அதற்கு

ஏழுமூன் றிருபத்தொரு பீரங்கி யேற்றி

மூட்டினான் பீரங்கி சப்தம் விேட்டு

முழங்குதே கோட்டை மேல் மழைமாரி போலே மூலைக்கரை கொத்தளத்தை நோக்கிக் குண்டு

மோதினதைக் கண்டல்லோ மதுரை துரைகாணன்

படை மன்னர் தங்களை யழைத்து கானு பயம் பிறக்க வொரு வயணமேது சொல்வானாம் பகலெல்லாம் பிரிட்ட னிடித்ததுவை நீங்கள்

ராத்திரிக்கு ராத்திரியே கட்டவேனு மென்று இடிக்க எடுத்தெடுத்துக் கட்டி அதிலே

இருந்து சமாளித்தான் மதுரை துரைகானன். இது கண்டு துரை பெரிய பிரிட்டன் அப்போ

சமர் செய்த சேதிகளை சீக்கிர மெழுதி சிங்கமே கான்சாய்பு நீலா ஒரு

சேதி நான் பிரட்டனிப்போ சொல்லுகிறேன் கேளு இன்னமுன் பேரிலே கானு குண்டு

எண்ணி யொரு நூறிப்போ போட்டேனே யானால் அதமாகி போவையடா கானு என்று அப்போதே யெழுதியே யனுப்பிவிட்டான் பிரிட்டன் மறுவயணம் மதுரை துரைகானு அப்போ

வயணமொரு சேதி யெழுத லுற்றா னப்போ