107
பிரிட்டன் துரைக்குப் பட்ட காயம் அப்போ
புண்ணாகி பொல்லாத தொந்தர வுண்டாகி
மன்னவ னிறந்தானே பனிரண்டு மணிக்கு பிரிட்டன்
மாராட்ட மயக்கங்கள் கண்டு
பிரிட்டன் துரை யிறந்த சேதி அப்போ
மம்முதலி திரும்பிப்போக எண்ணுதல் புண்ணியன் நவாபு துரை காதிலே கேட்டு
பிரிட்டன் துரை விழுந்து போனானே - இனி
பலனில்லை பாளையத்துக் கென்றெண்ணி மனதில் பாளைய மிங்கே யிருக்கட்டும் நாளை
பயணமென்று மம்முதலி செர்ன்ன மாத்திரத்தில்
தளவாய் கூறல்
தாண்டவ ராய பிள்ளை கேட்டு - அப்போ
தயவாக மம்முதலி துரையே - ஆண்டவனே மம்முதலி துரையே இப்போ
அன்பாக ஒரு வசனஞ் சொல்லுகிறேன் கேளு பதினெட்டுப் பாளையக் காரரும் பிரிட்டன்
பட்டாளம் பனிரண்டு பசுமலை யிருக்க முப்பது பட்டாளத் துடனே இங்கே
முடிமன்னா கோட்டை விட்டு வந்தீர் நவாபே கானனைப் பிடியாமல் போனால் நம்மை கண்டபடி ஏய்ப்பார்கள் பாளையக் காரர்கள் - பின்னாலே திருச்சினாப் பள்ளிக்கு கானு
பாளையத்தை கூட்டியே வந்திருவா னென்றான் இது சேதி மம்முதலி கேட்டு தனது
இருதயங் கலங்கியே நவாபு துரையும்
சண்டை செய்ய முடிவு
என்ன செய்யலாம் பிள்ளை மாரே என்று
ஈஸ்வர நவாபுதுரை கேட்டுட்டா ரப்போது தாண்டவ ராயபிள்ளை அப்போ - பாதர்
அதிபதி நவாபுதுரை யேறிட்டுப் பார்த்து பாளையமும் நீருமிங்கே யிருந்து கொஞ்சம்
மாறட்டமாகவே சண்டை செய்தி ரானால் எண்ணி யெட்டு நாளைக் குள்ளாக வெளியில் இழுக்கிறேன் கான்சாயபை பிடிக்கிறே னென்றான் அது கேட்டு மம்முதலி சாய்பு பாதர்
இஞ்சிநீர் கேமலை' வரவழைக்கச் சொல்லி 87. இஞ்சிநீர்க் கேமல் - எஞ்சினியர் கேமல்