115
நானுனக்கு அகப்பட்டாப் போலே இப்போ
நபாபுதுரை மகனேநீ அகப்பட்டையே யானால் தேங்காயும் உன்சதையு மறுத்துத் தின்னச்
சொல்லி யடிப்பேண்டா கருவாட்டு லப்பே அப்போது மம்முதலி சிரித்து நல்ல
ஆண்பிள்ளை கானனென்று மனதில் நினைத்து ஏழரை வருஷங்க ளாச்சே கானு
இதமாகவே நல்ல மதுரை வந்து சேர்ந்து தேடிய திரவியங்க ளெல்லாம் இப்போ எங்கே யென்று கேட்டானே மம்முதலி துரையும் என்னுடைய பணத் தின்ன சாயபு இப்போ
என்னுடைய பிள்ளைக ளில்லையோ நவாடே என்னிடத்தில் சொல்லுகிற தென்ன என்று
ஒழுங்காகக் கேட்டானே கான்சாயபு துரையும் மூன்று நாளன்னம் புசியாமல் بالا لا يمي
முனை வீரன் கான்சாயபு பேசுகிறா னென்று சாதமுங் கொண்டுவரச் சொல்லி நல்ல
தாம்பாளங் கொண்டுவந்து வைத்து சொம்பில் சலங் கொண்டுவந்து வைத்து அப்போ
சீரான பதார்த்த வகை கொண்டுவரச் சொல்லி வெள்ளைத் தாம்பாளத்தில் போட்டு அப்போ
விதமான கான்சாய்பு முன்னெடுத்து வைத்தார் அப்போது கான்சாயபு நீலன் பாதர்
அன்னம் வைத்த தட்டைக் கண்ணாலே பார்த்து இடது காலாலே யுதைத் திட்டான் சாதம்
இதமான மல்லிகைப்பூ போலே சிதற தீவாசு மேல் சாதம் சிதற அப்போ
சிங்கம் நவாபு துரை யேறிட்டுப் பார்த்து ஆலோசித்து துரை மாரைப் பார்த்து இவனுக்கு
ஆக்கினை யென்ன வென்று கேட்டார் நவாபு அப்போது துரைமார்க ளெல்லாம் கூடி
ஆலோசனை செய்து சாஸ்திரத்தைப் பார்த்து சாஸ்திர முறையின் படியே அப்போ
சாயபுதுரை நவாபுக் கேது சொல்லலுற்றார் ஆக்கினை யொன்று மில்லை துரையே இவனைச் சும்மாவிடச் சொல்லி யிருக்குதென்று சொன்னார் அப்போது மம்முதலி சாய்பு மனதில்
ஆயாச மாகியே கோபித்துக் கொண்டு துக்காம லிவனை நீங்கள் விட்டால் என்னைத்
தூக்குங்க ளென்று சொல்லி எழுந்திருந்து போனார்