பக்கம்:காப்டன் குமார்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. காப்டன் குமார் Ae நடு ஹாலில் அழகாகப் போடப்பட்டிருந்த சோபாக்களில் அமர்ந்த வண்ணம் கருணாகரனும், அவரது நண்பர் இன் ஸ்பெக்டர் பாபுவும் எதைப் பற்றியோ வெகு சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந் தனர். கற்பகம்மாள் இரண்டு கப்புகளில் ஒவலையும், தட்டில் பிஸ்கட்டுகளையும் கொண்டுவந்து வைத்து விட்டுச் சென்றாள் . * பாபு, தமக்குப் பசியேயில்லை என்றார். இது பசிக்காக அல்ல; சும்மா சாப்பிடுங்கள்?’ என்று வற்புறுத்தினார் கருணாகரன், கையில் ஒரு பிஸ்கட்டை எடுத்தவண்ணம். அப்போது திடீரென்று அப்பா...அப்பா...?? என்று கத்திய வண்ணம் மாடியிலிருந்து வேகமாகச் கீழே இறங்கி வந்த சாந்தியை ஏககாலத்தில் இருவம் திடுக்கிட்டு நோக்கினர். என்னம்மா...என்ன??? என்று கருணாகரன் மிகுந்த பரபரப்போடு கேட்டார்.