பக்கம்:காப்டன் குமார்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 சாதாரண நாட்களானால் ஏஜெண்டிடம் பணத் தைக் கொடுத்துக் குமார் ஒர் இடத்தில் காத்திருப் பான்; அவர் பண்டங்களை வாங்கிக் குமாரிடம் கொண்டுவந்து கொடுப்பார். ஆனால் அன்று ஒரு பெரிய தொகைக்கு வியாபாரம் நடத்த வேண்டியிருந் தது. ஆகவே குமாரையும் ஏஜெண்டுடன் கூடவே சென்று காரியத்தை முடித்துக்கொண்டுவரச் சொல்லி யிருந்தான் மன்னாடி. குமாரும் அவனுடைய விருப் பத்திற்கு மறுப்புச் சொல்லவில்லை. ஆனால் ஏஜெண்ட் தன்னை அழைத்துக் கொண்டு சென்ற இடத்தை அடைந்ததும் அவன் வீல்’ என்று பெரிதாக அலற நினைத்தான். ஆனால் தாங்கமுடியாத பயத்தின் காரணமாக அவனது குரல் தொண்டைக் குழியிலேயே அழுந்தி விட்டது. ஆ T- 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/92&oldid=791381" இலிருந்து மீள்விக்கப்பட்டது