பக்கம்:காப்டன் குமார்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9s மடியிலே கனம் ASA SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS உலகத்தில் யார் கண்ணியமானவர்கள், யார் நேர்மைக்காகப் பாடுபடுபவர்கள் என்று எண்ணி னானோ; அவர்கள் எல்லாரும் அதற்கு மாறாக இருந் தார்கள். சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டியவர் அதைக் காலால் மிதித்து நடப்பதைக் கண்டான் குமார். திருடனைப் பிடிக்க வேண்டிய அதிகாரியே திருடன் ஆவதைக் கண்டு அவன் திடுக் கிட்டான். E. ஆம்! அந்த ஏஜெண்ட் குமாரை அழைத்துச் சென்ற வீடு, யார் வீடு தெரியுமா? அவனுடைய உயிர் நண்பன் சுவானின் வீட்டிற்கேதான் அவர் அவனை அழைத்து வந்தார்: ஒரு கணம் குமாரின் தலை சுழன்றது. அப்படியானால் சுவானின் தந்தை ஒரு பதுக்கல் பேர்வழியா? கள்ள வியாபாரியின் மகன்தானா அவன் நண்பன்! இத்தனை படாடோப மாகக் காலம் கழிக்கும் சுவானின் தந்தை சேர்த்த சொத்துக்கள் எல்லாம் இப்படிக் குவிந்தவைதாமா? சி?...என்று மனத்திற்குள்ளேயே நொந்து கசந்து கொண்டான் குமார். - *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/93&oldid=791382" இலிருந்து மீள்விக்கப்பட்டது