பக்கம்:காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முகவுரை


“காலனைக் கட்டி யடக்கிய கடோரரித்தன் கதை” என்னும் இக்கதை Lord Lytton ( லார்ட் லிட்டென்) ஆங்கிலத்தில் எழுதிய “Death and Sisyphus” (காலனும் சிசுபசும்) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது. மிக்க இனிமை வாய்ந்த இக் கதையை தந்தம் தமிழுலகோர் படித்து இன்புற வேண்டும் என்னும் ஆசைமீக்கூரத் தமிழர் சுவைக்கு ஏற்ற வேறுபாடுகளைப் புகுத்தியமைத்து இந்நூல் எழுதப்பட்டது. இக் கதையை நாடக ரூபமாக அமைத்தால் பெரிதுஞ் சுவைதரும் என்பதற்கு ஐயமில்லை. இக் கதையால் அறிவின் பயன் இன்னதென்பதும், சாவு என்பது இல்லாவிட்டால் மனிதர்களின் நிலை இவ்வாறிருக்கும் என்பதும் விளங்கும். இந் நூலால், காலன் (கூற்றுவன்) வேறு, (எமன்) யம தருமாஜர் வேறு என்னும் விடயமும் அறியவரும். காலன் இயமனுடைய தூதன் என்பது, "எமனால் ஏவி விடு காலன்” எனவருந் திருப்புகழாலும் (1051) “தரும ராசற்க்காவந்த கூற்றினைக் குமைப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே” என்னுந் தேவாரத்தாலும் , “தருமனு மடங்கலும் (கூற்றம்)” என்னும் பரிபாடலானும் (3) விளக்கமுறும்.

சென்னை
16-2-1928

வ.சு. செங்கல்வராய பிள்ளை. எம். ஏ.

(Dt, Registrar)
and

Asst. Regr. of Joint Stock Companies, Madras