பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 292


வில்லை. முடிவாக இந்த நடவடிக்கையில் ஒரு தீர்மானத்திற்கு வந்தேன். பாளையக்காரனைக் கைது செய்ய வேண்டுமென்ற தேவை இருந்தது. இரவில் கோட்டையைக் காப்பதும், பாளையக்காரனைத் தப்பிவிடாமல் காப்பதும் ஒரே சமயத்தில் இயலாது. ஏனெனில் அவன் தப்பிக்க முயற்சிப்பான் என்பது என் நம்பிக்கை. (தவிர்க்க முடியாத நிலையில் அது தவறில்லையே! - ந.ச.) பிறகு என்னுடன் தளபதிகள் ஓராலி (O'Reilly), புரூசு (Bruce) முற்றுகையிடும் துருப்புகளை நடத்தும் அனுபவம் மிகுந்த அதிகாரிகள் அனைவரையும் அழைத்துச்சென்று அவர்களுக்கு என் கட்டளைகளைத் தெரிவித்தேன். அந்தத் தாக்குதலில் உண்டாகும் வெற்றியைப் பற்றிய அவர்கள் எண்ணம் என்னுடைய எண்ணத்துடன் ஒத்திருந்தது.

பத்து மணிக்கு நான் ஒழுங்கான கவுல் (நில உடன்படிக்கை) அனுப்பி வைத்தால் நான்கு மணி நேரத்திற்குள் பாளையக்காரன் என்னை வந்து சந்திப்பதாகச்செய்தி அனுப்பினான். அப்பொழுது படைகள் முற்றுகைக்காக நிறுத்தப்பட்டிருந்தன. முதல் பெரும் படையில் 3-வது படை அணிவகுப்பிலுள்ள பக்கப்படை வகுப்பும், உள்நாட்டுக் காலாட் படையின் 13வது படை அணி வகுப்பின் 4-வது பக்கப் படை வகுப்புகளும் தென்புறவாயிலைத் தகர்க்க 6 பவுண்டு பீரங்கியுடன் தயாராயிருந்தன. இந்தக் குழு 3 பீரங்கிகளாலும் முதல் பெரும் படையின் 13வது படை அணிவகுப்பின் படைவகுப்புகளாலும் சூழப்பட்டிருந்தன. அதே நேரத்தில் லெப்டினன்ட் டல்லசின் தலைமையில் அனுப்பப்பட்ட இரண்டு சாரி சிப்பாய்களால் கோட்டையின் வடபகுதி தாக்கப்பட்டது. அப்படை முதலிலேயே ஒழுங்காகவும் உறுதியுடனும் முன்னேறித் தாக்கின. என்றாலும் ஒரே குழப்பம் காரணமாகக் கோட்டையில் ஏற்பட்ட பிளவை நோக்கி ஏறிச் செல்லவோ அல்லது 6 பவுண்டு பீரங்கியால் முழுதும் தகர்க்கப்பட்ட வாயிற்படி வழியாய் உள்ளே நுழைவதற்கோ இயலவில்லை. வெற்றியின் சாயல் ஏற்பட்டதால் அம்முயற்சி தொடர்ந்து செய்யப்பட்டது. ஆனால் தீவினைமிக்க அந்தச்சூழ்நிலையில் அதிகாரிகளைவிட ஐரோப்பியர்களே தங்கள் வீரத்தைச் சிறப்பாகக் காட்டினர். நான் அனுப்பும் அறிக்கையிலிருந்து நம்முடைய இழப்பைப் பற்றித் தாங்களே அறிந்து கொள்வீர்கள். ஆனால் என்மேல் அக்குற்றத்தைச்சாட்டிக் கொள்ள என்மனம் இசையவில்லை. எப்படியாயினும் தங்களிடமிருந்து என் நடவடிக்கைகள் பற்றிச் சாதகமான முடிவுகள் வரும் வரை நான் பெருத்த தடுமாற்றத்தை அனுபவிப்பதை என்னால் தவிர்க்க இயலாது, காலாட்படையில் 19 ஆம் படைப்பகுப்பையும் 12 பவுண்டு பீரங்கிகள் இரண்டையும் என்னோடு வந்து சேர்ந்து கொள்ளும் படி ஆணை பிறப்பித்துள்ளேன். 24 பவுண்டு பீரங்கிக்காக பாளையங்