பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 330

 சேர்ந்த காப்டன் வொயிட்லே (Whiteely) முதல் குதிரைப் படையைச் சேர்ந்த தளபதி வாலென்டைன் பிளாக்கெர் (Valentine Blacker) 74 வது பிரிவைச் சேர்ந்த தளபதி காம்ப்பெல் (Campbell), 4வது பிரிவைச் சேர்ந்த தளபதி பிர்ச் (Birch) ஆகியோர் காயம்பட்டனர்.

தளபதி பிளேகர் (Blacker) இரண்டு மூன்று இடங்களில் ஈட்டியால் குத்தப்பட்டார். ஆனால் போர்க்களத்தில் போட்டியிட்டு எப்பொழுதும் இடரை எதிர்த்து முன்னணியில் நிற்கும் ஜேம்ஸ் கிராண்ட் (James grant) எங்களுடைய போர் முரசைத் தட்டி அவரைத் திரும்ப அழைக்கும் வரை இடைவிடாது போரிட்டார். ஐரோப்பியர்கள் 19 பேரைக் கொன்றார்; 76 பேரைக் காயப்படுத்தினர்; உள்நாட்டு வீரர்கள் 24 பேரை கொலை செய்து, 96 பேர்களைக் காயப்படுத்தினர். மொத் தத்தில் அதிகாரிகளையும் சேர்த்து ஏற்பட்ட இழப்பு 223 பேர்.

வெற்றியற்ற இந்தத் தாக்குதலில் மிகத் துன்பத்திற்காளான எங்களுக்கு (ஐயோ! - ந.ச.) அருவருக்கத்தக்க நிலையையடைந்த கோட்டையின் உட்புறக் காட்சி மிக மனநிறைவைத் தருவதாக இருந்தது (அட பாவி! - ந.ச.) அதை முற்றுகையிடப் பலமுறை முயற்சி செய்த போதிலும் முற்றுகையின் பயனாய்க் கோட்டையைக் கைப்பற்றியது இதுவே முதல் தடவையாகும். ஆதலால் அத்தகைய எண்ணம் ஏற்பட்டது. உள்ளே தரையில் மூன்றாயிரம் ஆண்களும் அவர்களுடைய குடும்பங்களும் உயிர் வாழ்வதற்கு முயன்று தங்கியிருந்த பயங்கரக் குழிகளைக் கண்ட போது நாங்கள் அடைந்த வியப்புக்கும் வேதனைக்கும் எதுவும் இணையாகாது. எந்த மொழியாலும் அந்த அச்சமூட்டும் காட்சியை விவரிக்க இயலாது (அந்தோ! - ந.ச.) குண்டுகளையும் வெடி மருந்துக் கலங்களையும் தவிர்ப்பதற்காக அவர்கள் அந்தக் கோட்டையில் ஒவ்வொரு பகுதியிலும் குழிகளைத் தோண்டியிருந்தனர். அவ்வப்போது கிழக்குப் பக்கத்திற்கு அப்பால் சிலர் இருந்தபோதிலும் அந்த இடத்தில் கூடுதலான கூட்டமே இருந்திருக்க வேண்டும். வடமேற்கு கொத்தளத்திலிருந்த எங்களுடைய பழைய வெடிப்பு எங்களுடைய தனி கவனத்தைக் கவர்ந்தது. அதன் விளக்கமே அந்தக் கோட்டையிலுள்ள மற்றெல்லாக் கொத்தளங்களுக்கும் பொருந்தும். அது வெளிப்பக்கத்தில் ஏறக்குறைய 15 அடி உயரம் உள்ளது. கிட்டத்தட்ட சதுரமானது. நாங்கள் பிளவு உண்டாக்கிய கொத்தள முகப்பு ஏறத்தாழ 30 அடி நீளமுடையது. உயரத்திலிருந்து 3 அடி கனமுள்ள கைப்பிடிச்சுவர் சிறிது சிறிதாக மையத்தை நோக்கி விரிந்து சரிந்து இருந்தது. அந்த மைய இடம் ஏறக்குறைய 40 மனிதர்கள் தொல்லைகளுடன் தங்கப் போதுமானது. கோட்டையின் ஒடுங்கிய பகுதியில் அமைந்திருந்த இதன் வழி ஒரு தடவையில் இரு