பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/151

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

வழக்கு மிகப் பழைமையானது என்று ஏற்படுகிறது. தமிழின் பழைமைக்கு இதுவும் ஒரு சான்றாகும்.

தமிழில் வந்துள்ள வடமொழிச் சொற்கள் வெவ்வேறு காலத்திற்குரிய மூன்று வகைப்பட்டவை:

(அ) அவற்றுள் காலத்தால் மிகப் பிந்தியவை சமய நூல்களில் வழங்குபவையாம். தமிழ்நாட்டிலுள்ள சமயங்களுள் மக்களிடையே செல்வாக்குடையவை மூன்று: முதலாவது, ஆகமங்களைப் பின்பற்றி எழுந்த சைவ சித்தாந்தம். தமிழரிடையே[1] பெருவழக்கா யிருப்பதும் இதுவே. அத்து விதத் தலைவரான சங்கராச்சாரியரது கட்சி இரண்டாவது. இராமானுஜரது வைணவம் இவ்விருவரது கட்சிக்குமே எதிரிடையானது. இம் மூன்று கட்சியினரின் சமய நூல்களும் தழைத்தோங்கிய காலம் 11-ஆம் நூற்றாண்டு முதல் 16-ஆம் நூற்றாண்டுவரை என்னலாம். இன்றியமையாச் சில மாறுதல்கள் நீங்கலாக, இவற்றுட் பெரும்பாலும் காணப்படுவன தூய வடமொழிச் சொற்களே.

(ஆ) மேற்கூறிய சமயத் தலைவர்கள் காலத்திலும், அதற்குச் சில நூற்றாண்டுகள் முன்னும், அஃதாவது 9, 10-ஆம் நூற்றாண்டு முதல் 13-ஆம் நூற்றாண்டுவரை, இருந்த சமணர்களே[2] தமிழில் இன்று காணும் வட சொற்களிற் பெரும்பாலானவற்றை வழக்கிற்கொண்டுவந்தவர்கள் ஆவர். சமணர்கள் அந்நாள் தழைத்தோங்கியது அரசியல் உலகில் அன்று; கல்வியுலகினும் அறிவுலகிலுமே யாம். உண்மையில், அவர்கள் தழைத்தோங்கிய காலமே தமிழ் நாகரிகத்தின் பொற்காலம் என்று கூறத்தக்கது. மதுரையில் சங்க மிருந்ததும், குறள், சிந்தாமணி முதலிய செந்தமிழ் நால்களும், இலக்


  1. ”தமிழ்ச் சூத்திரரிடையே” என்றெழுதியுள்ளார் கால்டுவெல்
  2. சமணர்கள் காலம் இன்னும் முந்தியது என்பது பிற்கால ஆராய்ச்சி முடிபாகும்.