பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#02 - கால ஆராய்ச்சி ஆராயின், அக்குறிப்புக்கள் பொருந்தப்பெற்ற பல்லவன், மூன்றாம் நந்திவர்மன் (கி.பி.840-86) என்று கூறலாம்: இச்சந்தர்ப்பத்தில், சிம்மவிஷ்ணுவுக்குப் பின் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு பல்லவப் பெருநாட்டை யாண்ட அரசர் பெயர்களை அறிதல் நலமாகுமாதலால், அவற்றைக் கால முறைப்படி தருகின்றோம். அரசர் பெயர் காலம் சமயம் இருந்திருக்கக கூடிய அடியாா முதலில் 1. மகேந்திரவர்மன் 1 615. 630് சமணம்; அப்பர் பிறகு சைவம் 2. நரசிம்மவர்மன் 1 630, 668 வைணவம் சிறுத்தொண்ட ரும்சம்பந்தரும் 3. மகேந்திரன் II 668-670 4. பரமேசுவரவர்மன் 670- 685 சைவம் 5. நரசிம்மவர்மன் II 685-720 சைவம் பூசலார் ( 2)sa என்ற இராச சிங்கன் சுந்தரர் (9) 6. பரமேசுவரவர்மன் II 720- 725 சைவம் 7. நந்திவர்மன் II 725- 790 வைணவம் திருமங்கை யாழ்வார் 8. தந்திவர்மன் 790-840 வைணவம் 9. நந்திவர்மன் III 840, 865 சைவம் சுந்தரர் (9) 10. நிருபதுங்கவர்மன் 865–890 வைணவம் இப்பட்டியலிற் கண்ட இராசசிங்கனுக்குப் பிறகு பல ஆண்டுகள் ஆண்ட பல்லவ அரசர் இருவரும் சிறந்த வைணவர் ஆவர். நந்திவர்மன் II ஒருவனே சிறந்த சிவபக்தனாகப் பட்டயங்களிற் குறிக்கப்படுபவன். எனவே, இந்த இருவருள் ஒருவர் காலத்தவராகத்தான் சுந்தரர் இருத்தல் கூடும். ஆதலின், சுந்தரர் குறித்த கழற்சிங்கனைப் பற்றியும் அவர் கால நிலைமையைப் பற்றியும் வரும் தேவாரக் குறிப்புக்களை முதற்கண் கண்டு, அவற்றுக்கு எந்த அளவு இவ்விருவர் கல்வெட்டுக் குறிப்புக்கள் ஒத்து வருகின்றன என்பதைக் காண்போம். சுந்தரர் கூறுவன 1. கடல் சூழ்ந்த உலகெல்லாம் காக்கின்ற பெருமான் காடவர் கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்! 2. "மண்ணுலகம் காவல் பூண்ட உரிமையால் பல்லவர்க்குத் திறை கொடா மன்னவரை மறுக்கஞ் செய்யும் பெருமையார் புலியூர்ச் சிற்றம்பலத் தெம்பெருமானைப் பெற்றாம் அன்றே".”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/109&oldid=793116" இலிருந்து மீள்விக்கப்பட்டது