பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுநதரா காலம 109 காலததவராதல வேண்டும்.” இக்காலமும் ஏறககுறைய நந்திவர்மன் காலத்தோடு ஒத்துவருதல் காண்க. 4. அப்பர் 81 ஆண்டுகள் வாழ்ந்தவர் எனக் கொள்வதாலும், அவர் பல ஆண்டுகள் சமண சமயத்தில் ஈடுபட்டிருந்து பிறகே சைவரானார் என்பதனாலும் சம்பந்தர் அவரது முதுமை நோக்கி, அப்பரே என அழைத்தமையாலும், அவரது காலம் ஏறத்தாழக் கி.பி. 580-660 எனக் கொள்ளலாம். இக்கால எல்லைக்குள், (1) மகேந்திரன் ஆட்சி (கி.பி. 615-630), (2) நரசிம்மன் ஆட்சியின் பெரும்பகுதி (கி.பி. 630-668), (3) வாதாபிப் படையெடுப்பு (கி.பி. 642), (4) நெடுமாறன் ஆட்சிக் காலத்தின் முற்பகுதி (கி.பி. 640-680) என்பன அடங்கிவிடுகின்றன. வாதாபிப் போருக்குப் பிறகு சிறுத்தொண்டர் செங்காட்டங்குடியிற் குடியேறிச் சிவத்தொண்டில் ஈடுபட்டவர். சம்பந்தர் வயது 16 என்ற கர்ணபரம்பரைக் கூற்றை நம்பினால், சிறுத்தொண்டரைச் சம்பந்தர் சந்திக்கையில் ஏறத்தாழ 10 வயதுடையவராகலாம்; அதன் பிறகே சம்பந்தர் மதுரை சென்று நெடுமாறனைச் சைவனாக்கி மீண்டார். ஆகவே உத்தேசமாகச் சம்பந்தர் சிறுத்தொண்டரைச் சந்தித்த காலம் கி.பி. 650 எனக் கொள்ளலாம். கொள்ளின், சம்பந்தர் பிறப்பு ஏறத்தாழக் கி.பி. 640 என்றும், முக்தியடைந்த ஆண்டு ஏறத்தாழக் கி.பி. 656 என்றும் ஆகும். ஆகவே, சம்பந்தர் காலமும் (கி.பி. 640- (s6)ါ" முற்சொன்ன அப்பர் காலத்துள் அடங்குதல் காண்க. இராச சிங்கன் (கி.பி. 685-720) காலத்தவர் சுந்தரர் எனக் கொள்ளின், அப்பர் இறுதிக் காலத்திற்கும் (கி.பி. 660) சுந்தரர் காலத்திற்கும் (கி.பி. 685-720) இடையில் ஏறக்குறைய 25 அல்லது 30 ஆண்டுகளே என்னலாம். இது மிகக் குறுகிய இடைக்காலம் என்பது அறியப்படும். சுந்தரர் காலத்தில் பெளத்த-சமண வாதங்கள் நாட்டில் இல்லை; ஏறத்தாழச் சமய உலகில் அமைதியும் சைவ சமய வளர்ச்சியும் இருந்த காலம் அவரது காலமென்பது அவர் பாக்களால் அறியலாம். இத்தகைய நிலைமை அப்பருக்குப்பின் 30 ஆண்டுக்குள் உண்டாகிவிட்டது என்று எண்ணுதல் இயற்கை நடைமுறைக்கு மாறுபட்டதாகும். 5. இராச சிங்கனே கச்சியில் முதன்முதல் கற்றளி எடுத்த பல்லவன். அவன் அசரீரி கேட்டான் என்று கயிலாசநாதர் கோவில் கல்வெட்டு அவனைப் பாராட்டுகின்றது. அதனையே சேக்கிழார் பூசலார் புராணத்திற்குறிப்பிட்டன ராகலாம் என்று அறிஞர் கருதுகின்றனர். அஃது உண்மையாயின், இராச சிங்கன் பூசலார் காலத்தவன் ஆகின்றான். அக்காலத்திலே சுந்தரரும் இருந்தனர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/116&oldid=793130" இலிருந்து மீள்விக்கப்பட்டது