பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 கால ஆராய்ச்சி நலம். இந்நினைவுடன் கீழ்வரும் செய்திகளைக் கருத்தூன்றிக் கவனிப்பது நல்லது. - 1. சேரமான் பெருமாள் ஆட்சி விட்டுச் சென்ற காலம் கி.பி. 825 என்பது சேரநாட்டில் கூறப்படும் வழக்கமாகும்." இவ்வாண்டு தவிர வேறு ஆண்டு குறிப்பிடாமையும் நோக்கத்தக்கது. இவ்வாண்டு கொல்லம் ஆண்டின் தொடக்கமாகும். கொல்லம் ஆண்டிற்கு வேறு காரணம் கூறப்படினும், நெடுநாள் வழக்காகிய இதுவும் ஒரு காரணமாகலாம் என்று கொள்வதில் இழுக்கொன்றும் இல்லை. இவ்வழக்கு உண்மை எனக் கொள்ளின், சேரமான் காலம் ஏறத்தாழக் கி.பி. 825-க்கு அண்மையது என்னலாம். எனவே, சேரமான் தோழர் ஆகிய சுந்தரர் காலமும் அதுவேயாம். இக்காலம் ஏறத்தாழ நமது நந்திவர்மன் காலத்தோடு (கி.பி. 840-865) ஒத்து வருதல் காண்க. 2. சுந்தரர் தமது வட திருமுல்லைவாயிற் பதிகத்தில், சிவபிரான், தொண்டைமான்' களிற்றை முல்லைக் கொடியாற் கட்டிட்டு, அச்செயலால் தொண்டைமாற்கு எல்லையில்லாத இன்பம் உண்டாக்கினான்' என்றொரு நிகழ்ச்சியைக் குறித்துள்ளார். இந்நிகழ்ச்சி இரண்டாம் நந்திவர்மனுடைய (கி.பி. 727-790) பட்டவர்த்தனம் என்ற மதம் பிடித்த யானையைப் பற்றியதாகலாம் என்று கல்வெட்டறிஞர் கருதுகின்றனர்." இஃது உண்மையாயின், இதனைக் குறிக்கும் சுந்தரர் காலம் மூன்றாம் நந்திவர்மன் காலமாகவே இருத்தல் வேண்டும். என்னை? இரண்டாம் நந்திவர்மனை அடுத்துப் பட்டம் பெற்ற சைவன் மூன்றாம் நந்திவர்மனே ஆதலால் ©TöTö. 3. சேரமான் சிறந்த கொடைவள்ளல் என்பது கார் கொண்ட கொடை என்று சுந்தரர் குறித்ததலால் அறியப்படும். அச்சேரமானிடம் மதுரைப்பாணபத்திரர் இறைவனது பாசுரத்தைக் காட்டிப் பொருள் பெற்றார். அப்பொழுது மதுரை மன்னனாக இருந்தவன் வரகுணன் என்று திருவிளையாடல் குறிக்கிறது. கல்வெட்டுக்களில் இரண்டு வரகுணர் காண்கின்றனர். ஒருவன் காலம் கி.பி. 800-830; மற்றவன் காலம் கி.பி. 862-880. முன்னவனே தொண்டை நாட்டின் தென்பகுதியையும் பல்லவனிடமிருந்து கைப்பற்றியவன்; அவனே சிதம்பரத்தில் கூத்தப்பிரானைத் தரிசித்திருக்கலாம்; திருவிடைமருதூரில் தங்கியிருக்கலாம். இரண்டாம் வரகுணன் தோல்விகளையே தரிசித்தவன். அவன் தில்லைக்குச் சென்றிருத்தல் இயலாது. அதற்குரிய சான்றில்லை. ஆகவே, சுந்தரர் ஏறத்தாழ முதல் வரகுணன் (கி.பி. 800- 830)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/115&oldid=793128" இலிருந்து மீள்விக்கப்பட்டது