பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் காலம் 137 இவ்வரலாற்றில் பெரும்பாலும் நம்பத்தக்க செய்திகளே கூறப்பட்டுள்ளன. ஆயின் சில, ஆராய்ச்சிக்கு உரியனவாகவும் உள்ளன. ஆதலின், அவற்றை முறையே ஆராய்தல் நமது கடமையாகும. 1. சிந்தாமணியைச் சோழன் படித்துச் சுவைத்ததைக் காணப்பொறாத சேக்கிழார் அதனைத் திருட்டுச் சமணர் பொய்ந்நூல் எனக் கூறியதற்கும், சிந்தாமணிக்கு மாறாக அவர் பெரிய புராணம் செய்தார் என்று கூறியிருந்ததற்கும் இப்பாடல் தவிர வேறு சான்றில்லை. சேக்கிழார் பாடிய பெரிய புராணத்திலும் இதற்கு அகச் சான்று இல்லை. ஆயின், இதற்கு மாறாகச் சேக்கிழார் சிந்தாமணியை நன்றாய்ப் படித்தவர் என்பதற்குப் பெரிய புராணத்திலிருந்து பல சான்றுகள் காட்டலாம். இங்ங்னம் அந்நூலை நன்றாய்ப் படித்து அநுபவித்த பெரும் புலவராய சேக்கிழார் அதனை வெறுத்தனர் என்றோ-அதற்கு மாறாக அரசனைத் தூண்டிப் பெரிய புராணம் செய்தார் என்றோ கோடல் பொருத்தமன்று. எனவே, சேக்கிழார் புராணக்கூற்று அதனைப் பாடிய ஆசிரியரது மனப்போக்கையே-சமணத்தில் வெறுப்பும் சைவத்தில் அளவு கடந்த பற்றும் கொண்ட மனப்பண்மையே உணர்த்துவதாகும்,” எனக் கோடலே பொருத்தமாகும். 2. இப்புராண ஆசிரியர் பெரிய புராணத்தை நன்றாகப் படித்தவராகத் தெரியவில்லை. நாயன்மாருள் முடிமன்னர் அறுவர் எனக் கூறி, அவருள் இடங்கழியார் ஒருவர் எனவும், குறுநில மன்னர் ஐவர் எனக் கூறி, அவருள் காடவர்கோன் கழற்சிங்கன், ஐயடிகள் காடவர் கோன் என்பவர் இருவர் எனவும் கூறியிருத்தல் பெருந்தவறு: என்னை? இடங்கழியார் கொடும்பாளுரை ஆண்ட சிற்றரசர் என்றும், பின்னவர் இருவரும் பல்லவப் பேரரசர் என்றும் சேக்கிழார் தமது புராணத்தில் தெளிவாகக் கூறியுள்ளார் ஆதலின் என்க. சுந்தரர், தமது காலத்தவனான கழற்சிங்கனைத் தாம் பாடிய திருத்தொண்டத்தொகையில், - கடல்சூழ்ந்த உலகெல்லாம் தாக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கு அடியேன் என்று தெளிவாகக் கூறியுள்ளார்." இதனையேனும் இத்திருத்தொண்டர் புராண ஆசிரியர் கவனித்தவராகத் தெரியவில்லை. 3. நாயன்மாருள், இயல், இசைத்தமிழ் வல்லோர் - அப்பர், சம்பந்தர், பேயார்; இசைத்தமிழ் வல்லோர் - நந்தனார், ஆனாயர், பாணர்; இயற்றமிழ் வல்லோர் - ஐயடிகள், திருமூலர், காரியார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/146&oldid=793201" இலிருந்து மீள்விக்கப்பட்டது