பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் காலம் 153 அருண்மொழித்தேவர் இப்பெயர் சேக்கிழார் இயற்பெயர் என்று கொள்ளத்தக்க முறையில் சேக்கிழார் புராண ஆசிரியர் குறித்துள்ளார். இப்பெயர் சோழர் காலத்தில் பெரு வழக்குடையது. முதல் இராசராச சோழனுக்கு இப்பெயர் இருந்தது." அருள் மொழி நங்கை என்று சோழமாதேவியர்க்குப் பெயர் இருந்தது." குடிமக்களும் இப்பெயர் பெற்றிருந்தனர்' என்பது பல கல்வெட்டுக்களைக் கொண்டு அறியலாம். ஆதலின், இப்பெயர் சேக்கிழாரது இயற்பெயராகக் கொள்ளலாம்; இன்றேல் பெரியபுராணப் பாடற் சிறப்பு நோக்கி இவரை இங்ங்னம் அறிஞர் அழைப்பராயினர் எனக் கோடலும் பொருந்தும். உத்தம சோழப் பல்லவராயர் இப்பட்டம் சேக்கிழார்க்கு அரசன் தந்தான் என்று சேக்கிழார் புராண ஆசிரியர் குறித்தனர். சோழர் அரசியலில் பலவகைத் துறைகளிலும் தலைவர்களாக இருந்தவர் - படைத்தலைவர், நாட்டுத் தலைவர், நாட்டை அளக்குந் தலைவர், திருமந்திரவோலை நாயகம், உடன்கூட்டத்து அதிகாரிகள் முதலியோர் மூவேந்தவேளான், காலிங்கராயன், கேரளராசன், தொண்டையன், வாணகோவரையன், பல்லவராயன், இருங்கோவேள், காடவராயன், கச்சிராயன், சேதிராயன், விழுப்பரையன் முதலிய பட்டங்கள் அரசரால் வழங்கப்பெற்றனர்.' பெறவே, சேக்கிழார் அமைச்சுத் துறையில் முதன்மையாக இருந்தமையால் 'உத்தம சோழப் பல்லவராயர் என்ற பட்டத்தைப் பெற்றனர் எனக் கோடல் பெரிதும் பொருத்தமேயாகும். சோணாட்டுத் திருநாகேச்சரம் சோழ நாட்டுத் திருநாகேச்சரத்தில் சேக்கிழார், அவர் தம்பி பாலறாவாயர், அவர் தாயார் ஆகிய மூவர் உருவச் சிலைகள் இன்றும் இருக்கின்றன. அவை, சேக்கிழார் அமைச்சராக இருந்தபொழுது அத்திருநாகேச்சரத்திற் பேரன்பு கொண்டிருந்தார் என்று சேக்கிழார் புராணம் செப்புகின்றதை உறுதிப்படுத்துகின்றன என்று கோடல் தவறாகாது. குன்றத்தூர்த் திருநாகேச்சரம் சேக்கிழார், சோழ நாட்டுத் திருநாகேச்சரத்தைப் போன்றதொரு கோவிலைத் தம் குன்றத்தூரில் கட்டி, அதற்கு அப்பெயரிட்டார் என்று சேக்கிழார் புராணம் கூறுகின்றது. குன்றத்தூர்த் திருநாகேச்சரம் என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/162&oldid=793241" இலிருந்து மீள்விக்கப்பட்டது