பக்கம்:காவியக் கம்பன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அசோக வனத்தின் சோகக்கதையைத் தொடர்ந்து செல்ல தோகைக்குத் துணிவில்லை. கம்ப நாடன் எழுதிக் குவித்த ஏடுகளைத் தொகுத்துத் தொகுத்துக் கட்டினுள் கம்பனின் எழுத்தாணி ஒலைமேல் நடம்புரிந்தது அகண்டகாவிரி அசைந்து நடப்பது போல் மெல்ல மெல்ல ஊர்ந்து செல்லும், சில வரிகளில் விரைந்து குதிரை நடைபோடும். சில வரிகளில் தாளத்துக்கு ஜதி மிதிக்கும் . சில ஏடுகளில் பொதிகைத் தென்றல் தவழும் சிலஏடுகளில் குற்ருலத்துத் தேனருவி கொட்டும் விரல்நொடிப்பில் எழுத்தாணி நடிக்கின்ற நாடகத்தை வைத்த விழி வாங்காமல் பார்த்திருந்தாள் அவள் கணவன் ஒருபுலவன் உலகப்பேர் அறிஞன் என்ற பெருமைக் கடலிலே மிதந்தாள் அவள் கண்களை தூக்கம் வந்து தழுவிற்று து.ானென்றில் சாய்ந்தபடி உறங்கி விட்டாள் எழுத்தின் மேல் கருத்துான்றிச் சென்றபடி GLDLITEIT பந்தம் புகைகின்றது எண்ணைவிடு என்ருன். பந்தம் சுடர்விட ஒருகரம் பிடித்தது. எண்ணெய் ஏட்டின் மேல் சொட்டியது வழித்து அவள்முந்தானையில் துடைத்து விட்டான். பசிக்கென்ன வந்திருக்கிறதெனக் கேட்டான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியக்_கம்பன்.pdf/40&oldid=796839" இலிருந்து மீள்விக்கப்பட்டது