பக்கம்:காவியக் கம்பன்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 வெறி கொண்டு சொன்ஞ்ரோ வீறு கொண்டு எழுந்தாரோ கம்ப மதகளிறின் கட்டுத்தறி அறுந்ததம்மா காலம் சென்றதோ காலன் வென்ருனே நாட்டரசன் கோட்டையிலே ராமாயணப் பாட்டரசன் துஞ்சினன் என்பார் என்ப மர்னிடக் கம்பனுக்கு வயது நூறே எல்லை காவியக் கம்பனுக்கு காலக் கணக்கில்லை சாவில்லை இருக்கின்ருர் சரித்திரப் புகழாக யாமறிந்த புலவரிலே கம்பரைப் போலில்லை என்று வள்ளுவர் இளங்கோ வரிசையிலே வைத்து நல்ல தமிழ்ப் பாரதியும் சொன்னன் என்ருல் நான் என்ன பெரிதாகப் புகழ்ந்திடுவேன் வணங்குகின்றேன் உலகத்து இலக்கியப் பேர் அரங்கில் தமிழனும் இன்று தலைநிமிர்ந்து நிற்பதற்கு வாய்ப்பளித்த கம்பநாடன் வாழியரோ! 馨

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியக்_கம்பன்.pdf/72&oldid=796907" இலிருந்து மீள்விக்கப்பட்டது