பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காவியப் பாவை




தமிழில் பாடு !

பாடுவ தென்றால் தமிழினில் பாடு
பாவையே உளமகிழ் வோடு !
-பாடு
வாடிடும் என்மன வேதனை தீர்ந்திட
வாழ்வு மலர்ந்திட அன்பு நிறைந்திடப்
-பாடு
வையம் பெற்றது தமிழ்மொழியாம்-அதன்
வழிவழி வந்தன பிறமொழியாம்
ஐயம் இல்லை உண்மையிதாம்-கண்ணே
அருமைத் தமிழே நமதுயிராம்
-பாடு
இடுக்கண் வருங்கால் சிரித்திடுவாய்-மன
இழுக்கெனும் மாசுகள் துடைத்திடுவாய்
வடுக்கள் நீங்கிட வாழ்ந்திடலாம்-என
வள்ளுவன் சொன்னதைப் பாடிடுவாய்
-பாடு

13