பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை அன்பாய் இரு ! எடுப்பு எத்தனை தரம் சொல்வேன்-மனமே எல்லாரிடமும் அன்பாய் இரு என்று -எத்தனை தொடுப்பு பித்தனைப் போல் கல்லாத பேயனைப்போல்-நீ பேசித்திரியாதே நேசித்திருப்பாயென்று -எத்தனை முடிப்பு வஞ்சனைகள் செய்யாதே வாழ்வினில் பொய்யாதே வாயில்வந்த படியெல்லாம் வாதுகள் செய்யாதே நஞ்சனைய திமொழிகள் நவிலாதே பிறர்பொருளை நாடாதே நடுநிலைமை கோடாதே என்று நான் -எத்தனை

104.