பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை எட்டியின் கனிகள் இருவிழி கவரும் எழிலினைக் கொண்டுள தறிந்திடடா கட்டிய புனே மொழி கேட்டிடும் போது காதுகள் குளிர்ந்திடும் தெரிந்திடடா காட்டிய எழிலால் கனியது சுவைத்தால் கண்களை மூடிடச் செய்திடுமே ஊட்டிய புனே மொழி உரைத்திடும் உதடுகள் உனையே மறுநாள் வைதிடுமே கூவிடுங் குயிலுங் காகமும் ஒன்றெனக் கொள்வது முறையோ சாற்றிடடா நாவொடு மனமும் ஒன்றிய மாந்தர் நல்லுரை கொண்டு போற்றிடடா புகழ்ந்திடும் மொழியோ இகழ்ந்திடும் மொழியோ பொதுப்பணி புரிவோன் ஒன்றெனவே அகந்தனில் உடையான் புறந்தனில் உடையான் அவனே தலைவன் மன்றினிலே

124