பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை உள்ளமும் உதடும் உள்ளமும் புகழும் உதடும் புகழும் உண்மை உணர்ந்திட வேண்டுமடா கள்ளம் எதுவென உள்ளம் எதுவெனக் கண்டு தெளிந்திட வேண்டுமடா நல்லவர் வருவார் அல்லவர் வருவார் நன்மைகள் பெறலாம் எனத்தேடிச் சொல்லிடும் புகழ்மொழி சொக்கிட வைத்திடும் சோதனை செய்திட வேண்டுமடா உண்மையும் உண்டாம் பொய்ம்மையும் உண்டாம் உன் புகழ் பாடும் பாடலிலே உண்மையும் பொய்ம்மையும் ஓர்ந்து தெளிந்திடும் உள்ளம் உனக்கே வேண்டுமடா நேற்றுனே வைதார் இன்றுனேப் புகழ்வார் நிலைமையை எண்ணிப் பார்த்திடடா காற்றுள போதே துற்றிட வந்தார் காரணம் இதுதான் கண்டிடடா 123