பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| காவியப் பாவை ஆயிரம் ஆயிரம் கொட்டுகின்ருர் - அணி ஆடை பல செய்து பூட்டுகின்ருர் கோயிலைப் போற்பல மாளிகைகள் - கட்டிக் கொள்ளையாம் மானியம் கூட்டுகின்ருர் விந்தையடா. இது விந்தையடா - என --- வேருெரு திக்கில் விரைந்து சென்றேன் சிந்தன்ை அற்றவர் அங்கிருந்து - புரி செய்கையைக் கண்டுளம் நொந்ததடா கண்ணுெளி மங்கிய காட்சியின்ை - பிறை கண்டது போலொரு கூனுடையான் எண்ணிய எண்ணம் விளப புதற்கே - ஒரு ஏதுவிலான் திக்கு வாயுடையான் நின்று நடந்திடக் கால்களிலான் - அவன் நிற்பது வோஒரு கோலின்துணை ஒன்றிய கோலினைப் பற்றுதற்கோ - கையில் உற்றவிரல்களும் முற்றுமிலான் இத்துணைப் பண்புகள் கொண்டவனே - நலம் ஏற்றிட ஊசிகள் போடுகின்ருர் சித்த மருத்துவம் செய்யினுமே - அவன் = சீரிய வாழ்வினைக் காண்பதுண்டோ ஆணிப்பொன் னுடையும் போர்த்துகின்ருர் - நல்ல ஆட்சிப் பொறுப்பையும் நல்குகின்ருர் காணிக்கை எத்தனை கொட்டுகின்ருர் - இந்தக் காட்சியைக் காணக் கண் கூசிநின்றேன் 22