பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை தமிழ் - என் மகன் பிள்ளைக் கலிதனைத் தீர்க்கவந்த ய் - அன்புப் பெட்டக மேஇன்பம் சேர்க்க வந்தாய் உள்ளக் கவலைகள் ஒட்டவந்தாய் - என்றன் ஓவிய மேபுகழ்க் காயேமே கொஞ்சுங் கனியிதழ் நீதிறந்தால் - உள்ளம் கொள்ளைகொள் ளுங்களி கூடுதடா விஞ்சு நலந்தரு யாழுடனே - குழல் வேண்டுகி லேன் தமிழ் மாமகனே பைந்தளிர் மேனியைத் தீண்டுகையில் - தமிழ்ப் பாலக னேநடை காணுகையில் பைந்தமி ழேஎன நின்பெயரை ச் - சொல்லிப் பாடிப் புகழ்ந்து ைப் பேசுகையில் நின்மொழி என்செவி சேருகையில் - நெஞ்சில் நேரும் மகிழ்வினை யாதுரைப்பேன் என்னுயிர் மூச்சென ஆனவனே - எனக் கேதுக்கடா அந்த மேலுலகம் விதி களில்விளை யாடுகையில் - என்றன் வேதனை யாவுமே ஓடிடினும் தீது புகுந்து விளைந்திடுமோ - என்று செந்தமி ழேமனம் அஞ்சுகிறேன் 40