பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை

மெல்லிய நற்றுகில் பட்டுடை பொன்மணி மேவிப் படர்தரு செம்பவழ வல்லியும் நல்லகில் ஆரமும் ஆதிய வாரிக் கொடுத்தது நம்புவியே ஆழ்கடற் சாவகம் புட்பகம் சீனமும் ஆதி யவனம் கடாாமுடன் ஈழம் முதலன தேயமெ லாமிவர் ஏகினர் தோணியில் வீரமுடன் இவ்வகை வாழ்ந்தனர் என்னின மாந்தர்கள் என்றதும் என்னுளம் பொங்கியதே அவ்வியல் தேய்ந்தனர் இன்றவர் என்றதும் ஆவென் றுயிர்த்துளம் மங்கியதே × 50