பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை ஆட வாராய்! எடுப்பு ஆடவாராய் என்ளுே டர்டவாராய் ஆடுமெழில் மாதரசே! - ஆடவாராய் தொடுப்பு பாடும்முறை நானறிந்து பாடிடுவேன் பெண்மயிலே பைந்தமிழே! என்னுயிரே! பாடியபின் தாமதமேன் -ஆடவாராய் முடிப்பு கட்டுதுகிற் கச்சின்மிசை முத்துவடம் ஆடக் கைத்தலங்கள் மொய்த்தவிரல் கற்றமுறை நாடப் பட்டுடுத்தும் சிற்றிடையில் மேகலைகள் பாடப் பற்றுகழற் கெச்சையொடு தெக்கணத்துக் கூத்து -ஆடவாராய் அஞ்சனமைக் கண்ணிரண்டும் கஞ்சமலர் விஞ்ச அம்பொனடிச் செஞ்சிலம்பு தஞ்சமெனக் கெஞ்ச மஞ்சள் ஒளி தங்குமெழில் கொஞ்சுமுக வஞ்சி வந்தெனது நொந்துழலும் வேதனைதீர் நெஞ்சில் -ஆடவாராய் மெல்லியலே உள்ளமதை நல்விழிகள் சொல்ல மெய்யுருகி என்மனமும் நின்மனமும் புல்லச் சொல்லுதொறும் தாள்விரல்கள் தாளவழி செல்லத் துள்ளிவரும் மான்பிணைபோல் சூழ்ந்துவரும் வல்லி! -ஆடவர்ராய் o