பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை - === -- _ தண்ணிர்க் குடங்களையும் பார்ப்பான் - மூடும் தட்டங்கள் விட்டெறிந்த தாளங்கள் சேர்ப்பான் கண்ணிரைக் கொட்டி அவன் தீர்ப்பான் - தட்டுக் காலிலே பட்டுத் தெறித்தவுடன் ஆர்ப்பான் --சொன்னலும் தாலாட்டித் தொட்டிலிலே போட்டால் - மெல்லத் தலைதுாக்கிச் சிரிப் :ானே என்பாட்டைக் கேட்டால் வாலாட்டித் திரிகின்ற சேட்டை - சொன்னுலும் வயிறெரியுங் கேளடிநான் படுகின்ற பட்டை -சொன்னலும் என்றேனும் நூலொன் றெடுப்பேன் - கண்டால் என்னைப் பிடித்துத் துவைத்துக் கடிப்பான் அன்றே அந் நூலுக்கும் ஆயுள் - தீரும் ஆணுலும் என்னேத்தான் அவர்நெஞ்சங் காயும் -சொன்னலும் கதவைத் திறந்தாலே போதும் - கண்டு கடிதோடி முன்வாயில் தெருவிலே வீழும் பதறி நான் ஓடிவரும் முன்னே - அந்தப் பவழச்செவ் வாய்நிறையும் பெருவாரி மண்ணே -சொன் னுலும் பஞ்சணையில் துயில்கொள்ளும் போது - சின்ன பாலகனின் பால்வழியும் கண்ணிமையின் மீது கொஞ்சிவிளை யாடுமெழில் காண்பேன் - செய்த குறும்பெல்லாங் காணுத தாயுள்ளம் பூண்டேன் - சொன்னுலும் ← 86