பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை புண்படுமா? - மாணவச் செல்வங்களே - நும்பால் மாசுகள் நேர்கையிலே நாணிடப் பேசிடுவான் - உங்கள் நன்மையை நாடிடுவான குற்றம் புரிந்து விடின் - உங்கள் கொள்கை திரிந்துவிடின் சற்றும் தயங்கலிலான் - வன்சொல் சாற்றிட முன்வருவான் புண்படும் உங்கள் மனம் - என்று பூட்டிய வாயினய்ைக் கண்படை கொள்ளுவனேல் - ஆசான் கல்வியைக் காப்பவனே? நோயினைத் தீர்ப்பதற்கே - கற்ற நூலின் மருத்துவன்பால் போயுடல் காட்டிடுங்கால் - அப்பிணி போக்குதற் கீவதென்ன? 88