பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

பேராசிரியர் நா.தர்மராஜன்

இந்த நூலைப் படிப்பவர்கள் இதை எழுதிய பேராசிரியர் யார், அவர் எந்தப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றுகிறார் என்று கேட்பார்கள். ஆகவே இப் புத் தகத்தின் ஆசிரியரான தோழர் அ. சீனிவாசனைப் பற்றிய சில தகவல்களை வாசகர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.

தமிழ் நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை நிறுவிய மாமேதைகளான பி. ராமமூர்த்தி ப. ஜீவானந்தம், பி. சீனிவாசராவ் ஆகியோரை எண்ணற்ற இளைஞர் கள் பின்பற்றினார்கள். அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள், தொழிற் சங்கங் களை அமைத்தார்கள், விவசாயிகளைத் திரட்டினார் கள். இந்த இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவர் களில் ஒருவர் தோழர் அ.சீனிவாசன்.

அவர் இளைஞராக இருந்த பொழுது இந்திய விமானப் படையில் சேர்ந்தார். விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து விமானப் படையில் வேலை நிறுத்தத்தைத் துாண்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் வேலை நீக்கம் செய்யப்பட்டு தண்டிக்கப் பட்டார்.