பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

"இந்நிறத்தவன் :இவ்வண்ணத் தன் ; இவன் இறைவன்
என்றெழுதிக் காட்டொனதே"

என்றும்

‘ஒரு நாமம் ஒருருவம் ஒன்றும் இல்லார்க்கு
ஆயிரம் திருநாமம்பாடி’

என்றும் கூறுகின்றனர். இவர்கள் வணங்கிய தெய்வங்கள் விலங்கு வடிவங்களிலிருந்த நிலையினின்றும். நீங்கி, மக்கள் வடிவில் உருவங் கொள்ளலாயின. கொடுமைக் குணங்கள் போய் அன்புக் குணங்கள் அமையப் பெற்றனவாய் மாறின. இதனால் தான் அம்முன்னோர் தெய்வங்கள் ஒவ்வொன்றும் தத்தமக்கென ஒவ்வொரு திறனைப் பெற்று விளங்கின என்று கூறுகின்றனர். அக்கேயர் வழிபட்ட தெய்வங்கள் ஒலிம்பஸ் மலையில் வாழ்ந்து வந்தனவாகக் கருதினர். அக்கடவுளரில் சீயஸ் (Zeus) என்பது வானத்திற்குரிய கடவுளாகும். இஃது ஒலிம்பஸ் மலையைத் தன் இருக்கையாகக் கொண்டு ஆண்டு வந்தது. எதினா என்னும் பெரிய கடவுள் தொழிற் கலைக்குரியதாய் விளங்கியது. இதன் வடிவு ஏதன்ஸ் (Athens) நகரில் உள்ளது. அப்போலோவின் (Apollo) உருவம். டெல்பி (Delpi) யில் உள்ளது. இக்கடவுள் வன்மைக் குரிய தெய்வமாக விளங்கியது. போருக்குரிய கடவுளாக ஏரஸ் (Ares) திகழ்ந்தது. இந்தத் தேவதைகளை வழிபடுவோர் மக்களைப் பலியிடுவதைத் தவிர்த்து மாக்களைப் பலியிடும் வழக்கத்தில் ஈடுபட்டனர்.