பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

மணவாட்டியை மண்ணுறுத்தும் செயலனைத்தையும் மாபெரும் முதியவள் கவனித்து வந்தனள் ஏதென்ஸ் நகர மாதர்கள் தம்மைப் பிறர் புகழ்வதையோ, வேடிக்கையாகப் பேசுவதையோ சிறிதும் விரும்பாதவர். இக்காலத்துக் காளைகளும், களிமயில்களும் குறிப்பிட்ட இடத்தில் சந்தித்து உரையாடுவது போல் ஏதென்ஸ் நகர வாலிபர் சிறுவர் சிறுமியர் யாண்டும் தனித்துக் கூடும் வழக்கம் பெறாதவர்கள். திருமணம் பெற்றோரின் முடிவுக்கு இணங்க இசைவு பெற்றதாக இருந்தாலும் மணமகள் விரும்பும் சீதனங்களை மணமகன் ஈந்தே மணக்க வேண்டியவனாய் இருந்தான். திருமணம், மணமக்கள் இல்லத்திலேயே அதற்கென அமைந்த திருமண மேடையில் நடைபெறும். அப்போது வந்தனை வழிபாடுகளை நடத்துவர். இவை முடிந்ததும் மணமக்கள் தம் உற்றார் உறவினருடன் அமர்ந்து சிறிது சிற்றுண்டி கொள்வர். அவ்வுண்டியில் சிறந்த உணவாக இருப்பது எள் அடையாகும்: இன்னோரன்ன மகிழ்வுக்குரிய நேரங்களிலும் கூட ஆண்களும் பெண்களும் தனித்திருந்தே எல்லாச் சடங்குகளையும் முடிப்பர். இது பெண்களின் அச்சம், நாணம் முதலிய நற்குணங்களைக் காட்டுவதாகும். மணமான மாலைப்பொழுதில் தம்பதிகளை ஊர்வலமாகப் பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் செல்வர். இதனால் திருமணம் பெண் வீட்டில் நடப்பது என்பதும் அறியக் கிடைக்கிறது. ஊர்வலத்தில் கேளும் கிளையும் ஆகக் கிளர்ந்து வருவர். இளஞ் சிறுமியர்.