பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88


நாடகத்தில் நடிப்பவர் தம் திறமையினால் ஒரு வனது சீற்றம், பகைமை, பொருமை, வெறுப்பு ஆகிய இவற்றை நடிப்பில் உணர்த்திக் காட்டுவர். இந்த மெய்ப்பாராட்டினால் நிகழப் போவது இன்னது என்பதை அறிந்து கொள்ளலாம் அன்றோ? நாடகங்கள் பெரும்பாலும் விடியற்காலத்திலிருந்து தொடங்கப் பெறும். இது முற்பகல் வரை நடக்கும். நாடகத்தில் கூட்டுப் பாடலில் கலந்து கொள்பவர் கட்குச் செலவாகும் தொகையைச் செல்வக்குடி மக்கள் ஏற்க முன்வருவர். நாடகங்களைக் காண்பதற்குச் சேய்மையினின்றும் வருவர். நாடகம் பார்ப்பதற்குரிய கட்டணம் சாதாரணமாக இருக்கும். இதனால் பொருள் ஈட்டும் கொள்கையுடன் நாடகம் நடத்தப் பெறாமல் கலை வளர்ச்சிக்காக இது நடத்தப்பட்டது என்பதை நாம் நன்கு அறியலாம்.

கொட்டகை கூட்டம் மிகுந்து பின்னால் வருபவர்க்கு இடம் இன்றித் துன்புறும் நிலையில் நிறைந்துவிடும்.

நாடகத்தைப் பற்றியோ நடிகனைப் பற்றியோ தங்கள் கருத்தை அறிவிக்க ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்து அவரைக் கூறுமாறு செய்வர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் கூறும் கருத்துக்கள் எவரும் ஒப்புக் கொள்ளக் கூடிய நிலையில் இருக்கும். இவர்கள் ஒவ்வொன்றையும் ஊன்றிக் கவனித்துத் தம் கருத்தைக் கூறுவர்.