பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

3கருப்பவதியாயொரு கலைஞனைப் பெறுவாய்
பெருக்க முடன் ஏசென்னும் போது தருவாய்.

4மாபரமனுக்கவர் மகனெனப்படுவார்.
தாவீதீன் அரியணை தனயனாயடைவார்.

5இஸரவேல் குடும்பத்தை என்றென்றும் ஆளும்
இறுதியவ் வரசிற்கே இலை யொருநாளும்.

5
கிறிஸ்துவின் பிறப்பு.
லூக் 1:28-33.
இராகம் - பியாக்தாளம் - ஆதி.
பல்லவி
இத்தரையின் மத்தியினில் பெத்தலையில் சத்திரம்
அனுபல்லவி
அத்தனேக புத்திரன் கிறிஸ்துவு முதித்தனர்
சரணம்

1கர்த்தரின் தூதன் நற்செய்திப் போதம்
செய்த்தலை சென்று சொல்ல மைத்தவர் கண்டுகொள்ள (இ)

2உன்னதம் மானம் மண்சமா தானம்
மன்பதை மேற்பிரியம் மன்னற்காக விண்பாட (இ)

3மீனுறக் கீழார் வான நன்னூலார்
மின்னொளிர் பொன்னே தூபம் வெள்ளைப்போளமிறுக்க (இ)
மீன் = நட்சத்திரம்.

6
ஏசுவின் ஏழைக்கோலம்
லூக் 1:28-33.
'வெடலனு கோதண்டபாணி' என்ற மெட்டு.
தோடிநபகம்.

பல்லவி
ஏசையா இதென்ன கோலம்
ஏழையோ நீ இந்த்ரஜாலம்