பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

நாரணம் புரி தூயாவி மீதுற
(ஸ்)நானகன் கரஞானாபிஷேகமு
னாளுகந்துபிதா வோடு மேவிய நசரேயா

வாரணங்கலி லேயாவு மாருத
வேகமுந்தணி வீறான வாசக
மாவகுந்துமெ யாவீநிவாரண மறியாகி

மாரணம் படு பாதாள மாசுணம்
மாய வென்றெழு மாராய! பேய் முதல்
மாள என்றனை ஆளாய் ம்னோகர மாணவானா

3
கிறிஸ்துவின் பிறப்பு.
தீர்க்கதரிசனம். மீகா 5:2. ஏசாயா 7:4.
ஜோர் ஜோர் ஜோர்' என்ற மெட்டு.

1யூதேயா தேச முற்ற யோக முள்ள பெத்தலேம்
யூதாவின் மாகுலத்தில் ஏது நின்போல் இத்தலம்.

2இஸரவேலை யாளும் பிரபும் எழுந்தருளும் உன்மிகை.
இதோ ஒரு மகவுயிர்க்கு மென்னும் எளிய கோலக் கன்னிகை.

3இம்மானு வேலனென்றே இவருக்கிடுவர் இயற்பெயர்
நம்மோடு தேவனென்னும் நலமிகும் பொருள் அதற் குயீர்.

4
காபிரியேல் மரியாளை வாழ்த்தல்.
லூக் 1:28-33.
‘பழனிமாமலை வாழும்' என்ற மெட்டு.’
இராகம் காப்பிதாளம் - ஏகம்.

 

1கிருபை பெற்ற மரியே கிளர்ந்து நீ வாழ
பரமன் நித்த முனக்குப் பலந்தரு தோழன்

2அரிவையருக்குள் நீயே அடைந்தனை ஆசி
அஞ்சாதே தேவதிரு அருட்சக்வாசி